சமந்தாவை மிஸ் செய்கிறாரோ? நாக சைதன்யா பதிவால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்- என்ன போட்டு இருக்காருன்னு பாருங்க

0
473
samantha
- Advertisement -

நாக சைதன்யாவின் பதிவு மூலம் சமந்தாவை இன்னும் மிஸ் செய்கிறாரோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது. பின் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சமந்தா நடிக்கும் படங்கள்:

மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். பின் இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

நாக சைதன்யா இரண்டாவது திருமணம்:

அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யா அவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். இந்த நிலையில் நாக சைதன்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய அம்மா லட்சுமி டகுபதி, அவரது அப்பா நாகார்ஜுனா மற்றும் சமந்தா-நாகா சைதன்யா செல்லப் பிராணி ஹாஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிந்திருக்கிறார்.

நாக சைதன்யா நன்றி பதிவு:

அதில், அம்மா- என்னை வேரூன்ற வைத்திருப்பதற்கும், எந்த நிபந்தனையுமின்றி அவரை நேசித்ததற்கும் அம்மாவுக்கு நன்றி. அப்பா நாக சைதன்யா- என்னுடைய நண்பர் போன்றவர். செல்லப்பிராணி ஹாஷ்- எப்படி நேசிக்க வேண்டும் என்பதை என்னை உணரச் செய்ததற்காக, என்னை மனிதனாக வைத்ததற்காக நன்றி என்று தெரிவித்திருக்கிறார். சைதன்யாவும், சமந்தாவும் ஹாஷ்க்கு செல்ல பெற்றோர்களாக இருந்தார்கள். இப்போது ஹாஷ் முன்னாள் தம்பதியினர் முன்பு இருந்த குடியிருப்பில் சமந்தாவுடன் வசித்து வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஒரு நாய் குட்டியை சைதன்யா இவ்வளவு மிஸ் பண்ணும் போது நிச்சயமாக சமந்தாவை மிஸ் செய்வார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement