பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங் சென்றாரா நாக சைத்னயா ? வைரலான புகைப்படத்தால் விமர்சித்த சமந்தாவின் ரசிகர்கள்.

0
612
nagachaitanya
- Advertisement -

மீண்டும் காதல் சர்ச்சையில் நாக சைதன்யா சீக்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.

-விளம்பரம்-

இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது.

- Advertisement -

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

இதனை அடுத்து இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா, குஷி போன்று பல படங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

நாக சைதன்யா நடிக்கும் படம்:

அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னொரு பக்கம், நடிகர் நாகை சைதன்யா காதலில் சிக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வேற இல்லைங்க, பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா தான்.

-விளம்பரம்-

மீண்டும் காதலில் சிக்கிய நாக சைதன்யா:

இவருடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஜுப்ளியில் உள்ள நாக சைதன்யா புதிய வீட்டில் ஒன்றாக இருந்ததாகவும், அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருந்ததாகவும் டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு இருந்தது. இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதனால் சமந்தாவீண் ரசிகர்கள் பலர் சமந்தாவை நாக சைதன்யா தான் ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்து வந்தனர்.

வைரலாகும் நாக சைதன்யா-சோபிதா புகைப்படம்:

இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் சுந்தர் மோகன் என்பவர் ஒரு புகைப்படத்தை வெளியீட்டு இருக்கிறார். சுந்தர் மோகன் என்பவர் லண்டனில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் சமையல் கலைஞர். அவருடைய ஹோட்டலுக்கு நாக சைதன்யா-சோபிதா துலிபாலா இருவரும் சாப்பிட சென்றிருக்கிறார்கள். அவர்களை கண்டவுடன் சுந்தர் மோகன், நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்படி எடுத்த போதுசுந்தர் மோகனுக்கு பின்னால் சோபிதா அமர்ந்திருப்பது பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை தான் சுந்தர் மோகன் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள். இதனால் நாகச் சைதன்யா சுந்தர் மோகனிடம் இந்த புகைப்படத்தை நீக்க சொல்லி இருக்கிறார்.

Advertisement