இப்போ தான் அவன் நிம்மதியா இருக்கான் – சமந்தா தந்தையை தொடர்ந்து மனம் திறந்த நாக சைதன்யாவின் தந்தை.

0
525
nagarjuna
- Advertisement -

தனது மகனின் விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மிகவும் உருக்கமுடன் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன் பின் இவர்கள் காதல் விவகாரம் வெளியே வர துவங்கியது.பின் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து மிக பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது.

-விளம்பரம்-

மேலும், இருவரும் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சமந்தா தந்தையின் பதிவு :

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. அதன் பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமந்தாவின் தந்தை சமந்தாவின் சில திருமண புகைப்படங்களை பதிவிட்டு உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

சமந்தாவின் முடிவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் :

அதில் ஆரம்பத்தில் சமந்தாவின் முடிவை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பின் இது அவருடைய முடிவு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சமந்தா- நாக சைத்தன்யா இருவருமே எனக்கு ஒன்று தான். அவர்களுடைய திருமணத்தை என்னால் மறக்க முடியவில்லை. நாக சைதன்யா குடும்பத்தினருடன் தொடர்ந்து நான் நட்பில் தான் இருக்கிறேன். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மகன் குறித்து நாகர்ஜுனா :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாகர்ஜுனா ‘அவர்கள் இரண்டு பேரும் பிரிந்த பின்னும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நாக சைதன்யா தற்போது தான் நிம்மதியாக இருக்கிறான். அதுவே, எனக்கு போதும். அவனுடைய வாழ்க்கையில் திருமணம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே துரதிஷ்டவசமாகத் தான் நடந்தது என்று ஒரு தந்தையாக உணர்ந்து இருக்கிறேன்.

நடந்தது எல்லாம் நன்மைக்கே :

ஆனால், தற்போதும் அவர்களைப் பற்றி பலரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அதனை அவர்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள். இரண்டு பேரும் அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதால் எந்த ஒரு பயனும் கிடையாது. நடந்தது எல்லாம் நன்மைக்கே, அது எல்லாமே ஒரு கனவு தான் என்று வாழ்க்கையை பார்த்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டியது தான்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement