பள்ளி சிறுமிகள் முதல் பிரபல நடிகரின் மகள் வரை – பல பெண்களின் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது.

0
6732
- Advertisement -

கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடந்தேறிய கொடூர பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் பிடிபட்டது. இன்னும் நடைபெற்று கொண்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தைபோன்றே பல்வேறு பெண்களைஆபாசமாக படமெடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து லட்சக்கணக்கான பணத்தை பறித்ததாக நாகர்கோவிலில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

நாகர்கோயில் மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி இவரது மகன் காசி என்னும் சுஜி என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டவர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ள காசி சமூக வலைதளத்தில் பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாகி பின்னர், தாம் ஒரு தொழிலதிபர் எனவும் வழக்கறிஞர் எனவும் விமான ஓட்டுனர் பயிற்சியை மேற்கொண்டு வரும் நபர் எனவும் பொய்யாக கூறியுள்ளார். மேலும், உடற்பயிற்சி செய்வது போல சில எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை கூட தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பெண்களை கவரவே காசி சமூகவலைதளத்தில் எப்படி தன்னை ஒரு அழகனாகவும் தொழில் அதிபராகவும் காட்சிப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும், சமூகவலைதளத்தில் பெண்களை நட்பு பிடித்த பின்னர் அவர்களிடம் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ,வீடியோ காலில் வல்லுறவில் ஈடுபட்டு பின்னர் அதனை அந்த பெண்களுக்கு தெரியாமலேயே புகைப்படத்தை எடுத்து இருக்கிறார்.

இவரை பெண்கள் யாராவது வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டாலோ அல்லது தங்களின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பினால் அதனை இவர் தனது பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை காண்பித்து அந்த பெண்களை பிளாக்மெயில் செய்து வந்துள்ளதாக காவல்துறை அதிகாரியான ஸ்ரீநாத் தெரிவித்திருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட ஒரு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் கையில் சிக்கியுள்ளார் இந்த சமூக வலைதள காதல் மன்னன்.

-விளம்பரம்-

விசாரணையில் காசி பள்ளி சிறுமிகள் முதல் பிரபல நடிகரின் மகள் வரை 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாயை பெற்றுள்ளார் எனவும், அதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் அடக்கம் என்றும் கூறியுள்ளனர். மேலும் விசாரணையில், சென்னையில் வசிக்கும் பிரபல நடிகர் ஒருவரின் மகளையும் காசி தனது காதல் வலையில் வீழ்த்த முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அந்த நடிகர் காவல்துறையை அணுகியதால் காசி பயந்து போய் ஒதுங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. காசியுடன் பழகி வந்த பெண்கள் ஒருவேளை காசிக்கு பணம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அவரது போனை எடுக்க மறுத்தாலும் காசி தன்னிடம் இருக்கும் சம்பந்தப்பட்ட பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். காசி மீது தற்போது புகார் கொடுத்த பெண்ணிடம் மட்டும் இருந்து 7 லட்சம் ரூபாய்க்கும் மேல் காசு பணம் பறித்து உள்ளாராம்.

காசியின் வீட்டை சோதனை செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த செல்போன்கள், கணினி, பென்டிரைவ் மற்றும் சில சிடிக்கள் பறிமுதல் செய்துள்ளார்களாம். இந்த சம்பவம் குறித்து மேலும் பேசியுள்ள காவல் அதிகாரி ஸ்ரீநாத், பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைனிலும் அல்லது தன்னுடைய செல்போன் எணணான 94981 11103 தொடர்புகொண்டோ புகார் கொடுக்கலாம். அவர்களது அடையாளங்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும். குற்றவாளி காசி கன்னியாகுமரியில் இருக்கும் சாதாரண பெண்களை குறி வைத்திருக்கிறார். ஆனால், சென்னையில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசதியான பெண்களை குறி வைத்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement