சமீப காலமாக இந்தியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகின்றனர் ராமாயணம், மஹாபாரதம் போன்ற பல தொடர்கள் இந்தியில் இருந்து டப் செய்யப்படுகிறது. அந்த வகையில் சில மாதங்களாக சன் தொலைக்காட்சியில் ஓடிய ஒரு பிரபலமான தொடர் தான் நாகினி.
இந்த தொடர் இந்தியில் தற்போது 3 பாகங்களைத் தாண்டி ஓடிகிக்கொண்டிருக்கிறது, இதன் இரண்டாம் பாகம் 2015 ஆண்டு கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. மேலும் இந்த தொடரில் முதல் இரண்டு பாகத்திலும் சீஷா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா.
இந்தி டிவி தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். சமீபத்தில் இவரது ட்விட்டர் பக்கத்தில் தற்கொலை சம்மந்த பட்ட பல வாசகங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சயிக்கள் பங்குபெற்ற நடிகை அடா சர்மா, தான் அவ்வாறு பதிவிட்டதற்கு காரணம் தனது நண்பரான “அன்கிட் ஜீரா” என்பவர் தான் காரணம் என்றும், அவர் தம்மை இதுவரை மூன்று முறை ஏமாற்றிவிட்டார் அதனால் தான் இதுபோன்ற பதிவுகளை நடிகை அடா ஷர்மா பதிவிட்டதாக கூறப்படுகிறது.