கண்ணு அழகா இருக்கு..! அடிக்கடி மேக்கப் போடுவோம்..! எங்களை கிண்டல் செய்வாங்க! சீரியல் நடிகை

0
2794
nandhini-serial
- Advertisement -

சென்னை சூப்பரா இருக்குது. தமிழ் மக்களும் நிறைய அன்பு காட்டறாங்க. தமிழ் சீரியல்ல நடிக்கிற உணர்வே ரொம்ப நல்லா இருக்குது” என உற்சாகமாகப் பேசுகிறார், ஸ்ரேயா அன்சான். சன் டி.வி ‘நந்தினி’ சீரியலில் நடித்துவருபவர்.

-விளம்பரம்-

nandhini shreya

- Advertisement -

நந்தினி’ சீரியல்ல எப்படி என்ட்ரி ஆனீங்க?
நந்தினி’ நாலு மொழியில் ஒளிபரப்பாகுது. கன்னடத்திலும் ரொம்ப ஃபேமஸா ஓடுது. நான்கூட அந்த சீரியலை ரெகுலரா பார்ப்பேன். கதையில் மூணாவதாக, காயத்ரி என்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் அறிமுகமாச்சு. உதயா சேனல்ல ஒளிபரப்பாகும் என்னுடைய ஒரு சீரியலைப் பார்த்துதான் காயத்ரி கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. எனக்கு ஆடிஷன் எதுவும் வைக்கலை.

ஆரம்பத்தில் தமிழில் நடிக்க உதறலா இருந்துச்சு. ஏன்னா, ‘வணக்கம்; நன்றி’ வார்த்தைகளைத் தவிர சுத்தமா தமிழ்த் தெரியாது. ‘அதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. கத்துக்கொடுக்கறோம்’னு டைரக்டர் மற்றும் டீம் மேட்ஸ் பலரும் சொன்னதுபோலவே செய்தாங்க. நானும் ஓரளவுக்குத் தமிழ் கத்துக்கிட்டேன்.

-விளம்பரம்-

actress shreya

ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பான நிகழ்வுகள் நடக்குமா?

நிச்சயமா நடக்கும். எங்க சீரியலில் பல மொழிகள் பேசும் நிறைய ஆர்டிஸ்ட்டுகள் நடிக்கிறோம். அதனால் பேசிக்கும்போதே நிறைய கலகலப்பு இருக்கும். மதியம் லன்ச் டைம்ல கேலி, கிண்டல் நிறைய நடக்கும். நான், நித்யா ராம், மாளவிகா உள்பட பெண் ஆர்டிஸ்ட்டுகள் அடிக்கடி மேக்கப் போடுவோம். அதை, ஆண் ஆர்டிஸ்ட்டுகள் கிண்டல் பண்ணுவாங்க. நாங்க அவங்களைப் பதிலுக்குக் கிண்டல் பண்ணுவோம்.

shreya

உங்களை கண்ணழகி என சுந்தர்.சி சொன்னப்போ எப்படி ஃபீல் பண்ணீங்க?

சமீபத்தில், ‘நந்தினி குடும்ப விழா’ நிகழ்ச்சி சன் டி.வி-யில் ஒளிபரப்பாச்சு. அதில், சீரியலின் தயாரிப்பாளர் சுந்தர்.சி சார் கலந்துகிட்டு, நிறைய ஆர்டிஸ்ட் பற்றிப் பேசினார். அப்போ, ‘இவங்க கண்கள் அழகா இருக்கும். கண்ணழகி’னு என்னைப் பாராட்டினார். இன்ப அதிர்ச்சியுடன் சந்தோஷப்பட்டேன்.

Advertisement