விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார்.
இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் மூலம் இவர் கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறார்
இவரின் திருமணம்
இவர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த நாஞ்சில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கூட பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு சமிபத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இது விஜயன் புகைப்படம் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயன் தனது திருமணத்தை முடித்து இருக்கிறார். அவர் அவரது முதலிரவில் நடந்த நகைச்சுவைகளை பற்றியும் தெரிவித்து இருந்தார்.
View this post on Instagram-விளம்பரம்-
எங்களுடைய முதல் இரவிற்காக அவர்களது அம்மா VGPயில் அறை ஒன்றை புக் செய்து இருந்தார்கள். ஆனால் எங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் தாமதம் ஆனதால் அங்கு செல்லவும் தாமதமானது. அதன் பின் எங்களுடைய அறைக்கு சென்றோம். அங்கு உச்சகட்ட கொடூரம் என்னவென்றால் அனைத்து முதலிரவுகளிலும் அலங்காரம் செய்வது போல கட்டளை கட்டிலை அலங்கரித்து இருந்தனர். என்னுடைய தம்பிஅது கட்டிலில் கட்டிலில் மேல் நிறைய பூக்களை போட்டு வைத்தார்.
அதன் மேல் படுத்தால் அது பூக்களில் உள்ள காம்புகள் எல்லாம் உடம்பில் காயம் ஏற்படுத்துமாறு இருந்தது. இதில் எப்படி படுக்க முடியும். ஏன் டா எங்களை கொடுமைப்படுத்துகிறீர்கள்? போல எனக்கு இருந்தது. அது கூட பரவாயில்லை அருகில் அரைக்கிலோ மைசூர் பாக்கு அரை கிலோ ஜாங்கிரி ஸ்வீட் கடை வைத்திருந்தார்கள். நாங்களே வரவேற்பு நிகழ்ச்சியில் முடிந்த சோர்வில் இங்கு வந்திருக்கின்றோம்.
ஆனால், அங்கு அவ்வளவு இனிப்புகள் இருந்தது என்றும் அங்கு நடந்த நகைச்சுவையான தருணங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய நாஞ்சில் விஜயன் ‘
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.