சமீபத்தில் பிரபல கன்னட நடிகையான பவித்ரா மற்றும் நடிகர் நரேஷ் பாபு புத்தாண்டின் போது முத்தமிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த பதிவு வைரலாகி பல விமர்சங்ககளை பெற்றது. மேலும் நடிகை பவித்ராவின் மீது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா குற்றம் சாட்டி வந்த நிலையில் பவித்ரா குறித்த அதிர்ச்சி தகவைலை ரம்யா சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை பவித்ரா :
கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை பாவித்ரா தமிழ் சினிமாவில் வெளியாகிய கெளரவம், அயோக்கியா, வீட்டுல விஷேசம், பெ ரண்சிங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பல சீரியல்களில் கதாயனாகிகளுக்கு அம்மாவாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனனே இரண்டு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். இந்த இலையில் இவரும் நடிகர் நரேஷும் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று சோசியல் மீடியாவில் கிசு கிசுக்கள் பரவின.
நரேஷ் மூன்றாவது மனைவி :
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அங்குசென்ற மூன்றவது மனைவி ரம்யா நடிகர் நரேஷ் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி கதியுள்ளார், அதனால் அங்கி போலீஸ் வந்ததை அடுத்து ரம்யா நடிகர் நரேஷுசை செருப்பால் அடிக்க சென்றுள்ளார் அப்போது அவரை போலீசார் தடுத்தனர். இதனையடுத்து ரமேஷ் ரம்யாவை பார்த்து விசில் அடித்துக்கொண்டே கிண்டலடித்தபடி சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— Ungamma (@ShittyWriters) July 3, 2022
ரம்யா கூறியது :
மேலும் சமீபத்தில் புத்தாண்டின் போது நரேஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் இவரும் நடிகை பவித்ராவும் முத்தம் கொடுத்து திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா கூறுகையில் `நரேஷ் தன்னிடம் வயது குறித்து பொய் சொல்லியதாகவும் அவருக்கு தன்னை விட 20 வயதிற்கு மேலே ஆகிறது என்று பிறகுதான் தெரிந்தது என்று கூறினார்.
மயக்கி திருமணம் செய்து கொண்டார் :
அதோடு திருமணம் செய்வதற்கு முன் உடலுறவுக்கு தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், சில சமயங்களில் திருமணம் வேண்டாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறினாராம், அதோடு ஆசை வார்த்தைகளால் மயக்கி திருமணம் செய்து கொண்டதாக கூறினார். மேலும் தனக்கு விவாகரத்து தேவையில்லை என்றும், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனுக்கு அம்மா அப்பா இருவருமே தேவைபடுகிறது. அதனால் தான் எக்காரணம் கொண்டும் விவாகரத்து தரப்போவதில்லை என்று கூறினார்
New Year ✨
— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) December 31, 2022
New Beginnings 💖
Need all your blessings 🙏
From us to all of you #HappyNewYear ❤️
– Mee #PavitraNaresh pic.twitter.com/JiEbWY4qTQ
நெக்லஸ் மாமியாருடையது :
மேலும் ரம்யா கூறுகையில் `நரேஷ் என்னுடைய அரசியல் பின்னணி பார்த்துதான் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு தேவையான அரசியல் உதவி இல்லை என்பதால் தான் இந்த சூழ்நிலை வந்துள்ளது. மேலும் பவித்ராவின் கழுத்தில் இருக்கும் வைர நெக்லஸ் என்னுடைய மாமியாருடையது, அவர் 2014ல் இதை வாங்கினார். இவர் அந்த நெக்லஸை அணிந்திருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்
பவித்ரா கூறியது :
இது குறித்து நடிகை பவித்ரா கூறுகையில் நான் ஒரு நடிகை எனக்கு தேவையான பொருட்களை என்னால் வாங்க முடியும், நகை மட்டுமல்ல, வீடு, கார் என பல சொத்துக்களை வாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது. இதற்கு என்னிடம் ஆதாரமும் உள்ளது நான் பொதுவாக பெங்களூருவில்தான் நகைகள் வாங்குவேன், யாரும் எனக்கு பரிசளிக்கவில்லை. நடிகர் நரேஷும் என்னை நாங்காவது திருமணம் செய்யவில்லை, விவாகரத்தும் நடக்கவில்லை. எங்கள் இருவரிடையே இருப்பது வெறும் நட்பான உறவு மட்டும்தான், அவரின் மனைவி ரம்யாதான் என்மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் என்று தன் மீதான குற்றங்களை மறுத்திருந்தார் நடிகை பவித்ரா.