52 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. மும்பையில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழில் பூவே பூச்சூடவா, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என பல படங்களில் ஹீரோட்டினாக நடித்தார். 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இடைப்பட்ட காலங்களில் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்ட நதியா, பின்னர் எம் குமரன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரிலும் நடிக்க உள்ளார்.