அனுமன் மந்திரத்தால் கம்பி எண்ணும் கருணாஸ் பட நாயகி – தரையில் உறங்கும் சோகம். இதான் காரணம்.

0
333
navneet
- Advertisement -

அனுமன் சாலிசா மந்திரங்களை மகாராஷ்டிரா முதல்வர் வீட்டின் முன்பாக ஒலிபெருக்கியில் ஒழிப்போம் என்று நவ்நீத் கவுர் ராணா மற்றும் ரவி ஆகியோர் அளித்திருந்த பேட்டி தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்திருந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த நடிகை நவ்னீத் கெளர். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். பின் இவர் அரசியலில் குதித்து விட்டார். இவர் சில ஆண்டுகாலமாகவே அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே நவ்னீத் கெளர் 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் 2019 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம் பியும் ஆனார். பின் எம்பி, எம்எல்ஏவாக உள்ள மனைவி கணவன் இருவரும் சிவசேனாவுக்கு தொடர்ந்து போராட்டங்கள் மூலம் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

நவ்னீத் கெளர் மற்றும் ரவி கைது:

இதனிடையே கடந்த 23ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு மக்களின் துன்பங்கள் நீங்க அனுமன் சாலிசா எனப்படும் அனுமன் மந்திரம் பாடப் போவதாக கணவன்- மனைவி இருவரும் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரையும் மகாராஷ்டிரா போலீசார் தேச விரோத வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து இருந்தனர். மேலும், எம்.பி, எம்.எல்.ஏ வான இருவரும் கைதாகி 11 நாட்கள் கடந்தும் ஜாமீன் கொடுக்க வில்லை. அதுமட்டும் இல்லாமல் சிறையில் இவர்கள் இருவருக்கும் முதல் வகுப்பு வழங்கவில்லை.

நவ்னீத் கெளர் மற்றும் ரவி எழுதிய லடித்தம் :

இதனால் நவ்னீத் கெளர் மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் தரையில் படுத்து உறங்குகிறார்கள். ஏற்கனவே நவ்னீத் கெளருக்கு ஸ்போன்டி லோசிஸ் பாதிப்பு இருப்பதால் வலியால் தவிக்கிறார் என்று கடிதம் எழுதி இருப்பதாக நவ்னீத் கெளர் வழக்கறிஞர் கூறி இருக்கிறார். இதற்கிடையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும் தங்களை கைது செய்ய வந்த பொழுது அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் நவ்னீத் கெளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

நீதிபதி அளித்த உத்தரவு:

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றங்கள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தனி நபருடைய வீட்டின் முன்பாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மந்திரங்களை ஓதுவது சட்டப்படி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விஷயம். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகிப்போர் அதற்கேற்றார்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நவ்னீத் கெளர் மற்றும் ரவி ஆகியோர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நவ்னீத் கெளர் – ரவி வீட்டிற்கு நோட்டீஸ்:

நவ்னீத் கெளர் மற்றும் ரவி ஆகிய தம்பதியருக்கு சொந்தமான வீட்டின் கட்டுமானத்தில் விதிமீறல்கள் இருப்பதாக புகார் வந்து இருக்கிறது. இதை அடுத்து மும்பை மாநகராட்சி நவ்னீத் கெளர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும், நாலாம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதிமீறல் இருந்தால் அகற்றப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிக்கவிட்டு இருக்கிறது. இப்படி நவநீத் மற்றும் ராணாவிற்கு ஜாமின் கிடைத்து இருக்கிறது.

Advertisement