நயன்தாராவிவின் அறம் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது வரை படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தனியாக அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாராவின் கையில் ஒரு டஜன் படங்கள் உள்ளது. இதிலும் பல படங்களில் தனி ஹீரோயினாக நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.
தற்போது நயன்தாரா நடித்து வரும் படத்தில் விஜய் டீவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் நடிக்கிறார். இவர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளை சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
முதன் முதலாக நயன்தாராவுடன் நடிக்க சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் ஜாக்குலின். பின்னர், நயன்தாராவை செட்டில் பார்த்த ஜாகுலின் நயன்தாராவிடம் பேசலாமா? வேண்டாமா? என தயங்கி தயங்கி நின்றுள்ளார்.
இதையும் படிங்க: திபீகாவின் தலைக்கு 5 கோடி! பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை !
அப்போது ஜாக்குலினைப் பார்த்த நயன்தாரா, உடனடியாக ‘ஹாய் ஜாக்குலின், எப்படி இருக்கீங்க? என்று கேட்க, ஷாக் ஆகிப் போயுள்ளார் ஜாக்குலின்.
மேலும், மேடம் என்னை உங்களுக்குத் தெரியுமா? என ஜாக்குலின் கேட்க?, அதற்கு நயன்தாரா, ‘நீங்க தான விஜய் டீவில ஆங்கரிங் செய்றீங்க’ எனக் கேட்டு ஜாக்குலினை மேலும் ஷாக் ஆக்கியுள்ளார்
பியூட்டி குயின் நயன்.