Cannes திரைப்பட விழாவை விட இதான் முக்கியம் – சர்வேதச விருது விழாவிற்கு நயன்தாரா செல்லாததற்கு இதான் காரணமாம்.

0
474
nayanthara
- Advertisement -

கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன், ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த இருப்பவர் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அதிலும் சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், நயன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் இயக்கி சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் O2.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

வெங்கட் பிரபுவிடம் நயன்தாரா இயக்குனராக இருந்த ஜி கே விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், லயன், காட் ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழா:

இப்படி ஒரு நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழா. இந்த விழாவில் கலந்து கொள்வதும், தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக சினிமா நட்சத்திரங்கள் கருதி வருகின்றனர். அந்த வகையில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா அண்மையில் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. மேலும், வருகிற மே 28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

-விளம்பரம்-

விழாவில் கலந்து கொள்ளும் நடிகர்கள்:

குறிப்பாக மாதவனின் ராக்கெட்ரி, பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் ஆகிய படங்கள் திரையிடப்பட இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த விழாவில் இந்திய திரைதுறை சார்பாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், கிராமிய இசைக் கலைஞரும் பாடகருமான மாமே கான், பாலிவுட் நடிகர்கள் நவாசுதீன் சித்திக், மாதவன், அக்‌ஷய் குமார் மற்றும் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நயன்தாரா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

நயன்தாரா திருமணம் :

இந்த நிலையில் இந்த கேன்ஸ் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஏன்னா, தற்போது நயன்தாரா அவர்கள் தங்களுடைய திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதால் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ள வில்லை என கூறப்படுகிறது. மேலும், நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இதனால் இவர்கள் இருவரும் திருமண வேலையில் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement