டேய் என் புருஷன் உக்கார்ந்து இருக்கார். மேடையில் தர்மசங்கடத்துக்கு ஆளான நயன்தாரா குரலுக்கு சொந்தக்காரர் தீபா.

0
4174
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் தீபா வெங்கட்டும் ஒருவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் வானொலி தொகுப்பாளினி மற்றும் டப்பிங் குரல் கொடுப்பவர் ஆவார். இவர் தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை தீபா வெங்கட் அவர்கள் 1975 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி மும்பை மகாராட்டினத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருக்கும் போதே தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்தார். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு டப்பிங் குரல் கொடுப்பவர் தீபா வெங்கட் தான். இவர் இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்க்கு முதன் முதலில் டப்பிங் குரல் கொடுத்தார்.

- Advertisement -

இவரின் டப்பிங் குரல் நயன்தாராவிற்கு பிடித்து போனதால் இதுவரை நயன்தாரா நடித்த பெரும்பாளான படங்களில் தீபா தான் குரல் கொடுத்து வருகிறார். இதன் மூலம் தீபா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவிற்கு நடிகை தீபா வெங்கட் தன்னுடைய கணவருடன் சென்று இருந்தார். அதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தீபாவை மேடைக்கு அழைத்தனர்.

வீடியோவில் 3:48 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அப்போது அவரிடம் ராஜா ராணியில் நடிகர் ஜெய்யுடன், நடிகை நயன்தாரா பேசும் புகைப்படம் காட்டப்பட்டது. இதனை பார்த்த தீபா தொகுப்பாளரை பார்த்து ‘போடா போ உனக்கு யாராவது தேன்மொழி கனிமொழி என வாய்க்கா வரப்புல திரிஞ்சிகிட்டு இருப்பா. அவளைத் தேடி தேடி லவ் பண்ணு’ என்று தீபா பேசினார். உடனே அந்த தொகுப்பாளர் ‘எனக்கு அப்ப நா தாங்க பயம். மத படி உங்களுக்கு ஐ லவ் யூங்க’ என்று நடிகர் ஜெய் டயலாக்கை கூறினார். நடிகை தீபா உடனே என் புருஷன் இருக்கார் என்று கூறி சிரித்தார். இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement