‘சொல்லாதீங்கனு நான் சொன்னேன்ல’ கோபப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பும் நயன்தாரா – வைரலாகும் வீடியோ.

0
1019
- Advertisement -

சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கோபப்பட்டு பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த படம் கனெக்ட்.

- Advertisement -

நயன்தாரா திரைப்பயணம்:

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

நயன்தாரா குடும்பம்:

பின் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இவர்கள் உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் உலக் தெய்வீக் என் சிவன் என்றும் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் தான் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை தனது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடி இருந்தார்கள். இருந்தாலும், இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

திருநாள் படம்:

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் பிராம்டிங் செய்யும் நபருடன் நயன்தாரா கோபப்பட்டு பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா, ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் திருநாள். ஈ படத்திற்கு பிறகு ஜீவா, நயன்தாரா இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் ராம்நாத் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜீவா, நயன்தாராவுடன், மீனாட்சி, கருணாஸ், மாரிமுத்து, உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

கோபப்பட்ட நயன்தாரா:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தினுடைய க்ளிப்ஸ் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் நயன்தாரா தன்னுடன் நடித்த பாட்டியிடம் டயலாக் ரியாக்சல் செய்து கொண்டிருப்பார். அப்போது பிராம்ட்டிங் கொடுப்பவர் நயன்தாரா பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றவருடைய வசனத்தை பேசி இருக்கிறார். இதனால் கோவமடைந்த நயன்தாரா நான் பேசும் போது எதுவும் பேசாதீர்கள். திருப்பி ஏன் பேசுகிறீர்கள். கவனம் செலுத்த விடுங்கள் என்று கோபமாக பேசி, அந்த இடத்தில் இருந்து சென்றிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement