சீன் சொல்லிக்கொடுக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நயன் – NRD ஷூட்டிங் ஸ்பாட் Memories.

0
369
nayan
- Advertisement -

ஏழு ஆண்டுகளுக்கு முன் நயனுடன் எடுத்த வீடியோவை தற்போது விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நீண்ட வருடமாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஆம் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதன் பின் இருவருமே தங்களுடைய கேரியரில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் பதிவு:

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிராத்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், ஒரு சிலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

வாடகை தாய் குறித்த சர்ச்சை:

பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றது உறுதியானது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. மேலும், இவர்கள் சட்டத்தை முறையாக பின்பற்றி தான் வாடகை தாய் குழந்தை பெற்றுடுத்தனரா? என்று பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியம், இந்த விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணையை துவங்கி இருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கிறோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

தீபாவளி பண்டிகை வாழ்த்து:

ஆனால், இதைப் பற்றி எல்லாம் விக்னேஷ்-நயன் இருவரும் கவலைப்படாமல் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இருவரும் தீபாவளி பண்டிகை அன்று தங்களுடைய இரட்டை குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி]இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியாவில் அழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ:

அதாவது, 7 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்போது நயன்தாராவிற்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் போது எடுத்த வீடியோவை பதிவிட்டு, இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அனைத்தையும் பெற்றேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement