கணவருக்காக படத்தில் இருந்து விலகிய நயன்தாரா – அடேங்கப்பா கணவர் மீது இவ்வளவு கரிசனமா.

0
426
- Advertisement -

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து பணத்திற்காக நடிகை நயன்தாரா விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி விட்டது. பின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்கள்.

- Advertisement -

எல்ஐசி படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.
பின் விக்னேஷ் சிவன் இயக்கருக்கும் படத்தின் எல்ஐசி என்ற பெயர் தன்னுடையது என்று தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்து இருந்தது. அதில் அவர், சுமா பிக்சர்ஸ் வாயிலாக எல்ஐசி பெயரை பதிவு செய்து வைத்திருக்கிறேன். எல்ஐசி என்ற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிக சரியாக பொருந்துவதாலும் கதையின் உடைய பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைவதாலும் நான் தர மறுத்து விட்டேன்.

படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை:

அதோடு இந்த தலைப்பை நான் முறைபடியாக பதிவு செய்தும் வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவனிடம் நன்றாக தெளிவுபடுத்தினேன். இது சட்டத்திற்கு புறமானது. இனியும் இந்த செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து எல்ஐசி நிறுவனம் பட தலைப்பு தொடர்பாக படக்குழு மீது புகார் அளித்து இருந்தது.

-விளம்பரம்-

படத்தில் நயன் விலகிய காரணம்:

மேலும், கூடிய விரைவில் இந்த படத்திற்கான தலைப்பு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கமிட் ஆகியிருந்தார். ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருந்தார். ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து இவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், நயன்தாராவுடைய சம்பளம் 12 கோடி உயர்ந்து விட்டதாம். இந்தப் படத்தின் பட்ஜெட்க்கு நயன்தாராவின் சம்பளம் தங்களால் கொடுக்க முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியதால் இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகி இருக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.

நயன் நடிக்கும் படங்கள்:

மேலும், நயன்தாரா நடிக்கிற இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் அன்னபூரணி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இதை அடுத்து நயன்தாரா அவர்கள் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Advertisement