நயன்தாராவிற்கு சிங்கப்பூர் கோவிலில் ரசிகர் செய்த செயலை பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

0
5741
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் பிகில். நடிகை நயன்தாரா அவர்கள் பிகில் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். மேலும், தளபதியின் பிகில் படம் திரையரங்குகளில் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் நடிகை நயன் அவர்கள் தன் காதலுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே . மேலும்,பிகில் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இவ்வளவு பிஸியான செடுலில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் தன் பிறந்த நாளை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார். மேலும்,அங்கு தயாரிப்பாளர் போனி கபூரை நடிகை நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நியூயார்க்கில் சந்தித்து உள்ளார்.

-விளம்பரம்-
nayanthara

- Advertisement -

மேலும், நியூயார்க்கில் அவரை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நயன். இது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்களுக்கு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளின் மூலம் நயன் அவர்கள் 35 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ளார். மேலும், இந்த வருடம் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா பிறந்த நாள் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். மேலும், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாகவே அதாவது நானும் ரவுடி தான் படத்திலிருந்தே காதலர்களாக வலம் வருவது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்.

மேலும், விக்னேஷ் சிவன் அவர்கள் தன் அன்பு காதலிக்கு வருடம் வருடம் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை மகிழ்விப்பார். இந்நிலையில் இந்த வருடம் தன்னுடைய காதலி நயன்தாராவுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார். அது என்னவென்றால் ஆயிரம் ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி நயன்தாராவின் பிறந்த நாளை சிறப்பாக சிறப்பித்து உள்ளார் விக்னேஷ். மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,நடிகை நயன்தாரா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வரவிருக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்து விட்டார். பின் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் வரவிருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடிக்க உள்ளார்.

-விளம்பரம்-
Nayanthara

இதனைத் தொடர்ந்து இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. மேலும்,நயன் அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக கடும் விரதம் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள தீவிர ரசிகர் ஒருவர் சிறப்பு பூஜை செய்துள்ளார். அப்போது நயன்தாரா பெயரில் அர்ச்சனையும் செய்துள்ளார் அந்த ரசிகர். மேலும், இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த ரசிகர் பிரார்த்தனை செய்ய வாங்கிய டிக்கெட்டை போட்டோ எடுத்து இணையங்களில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement