வாடகை தாய் விவகாரம் – Not Rechableலில் சிகிச்சை அளித்த மருத்துவர் – சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை.

0
374
- Advertisement -

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை குறித்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது . நீண்ட வருடமாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஆம் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதன் பின் இருவருமே தங்களுடைய கேரியரில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றது உறுதியானது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. மேலும், இவர்கள் சட்டத்தை முறையாக பின்பற்றி தான் வாடகை தாய் குழந்தை பெற்றுடுத்தனரா? என்று பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், இது குறித்து சுகாதாரச் சார்பில் மருத்துவர் தலைமையிலான 3 குழு விசாரணையை துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று சுகாதாரச் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

வாடகைத்தாய் குழந்தை குறித்த சர்ச்சை:

இவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன சேர்க்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது. மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் பதிவு திருமணம் 2016ல்யே நடைபெற்றிருக்கிறது. அதற்கான சான்றிதழும் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. திருமண பதிவு சான்றிதழ்களின் உண்மை தன்மையை பதிவுத்துறை உறுதி செய்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் இந்த தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விசாரித்த போது 2020ல் அவர்களுடைய குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

சுகாதாரச் சார்பில் வெளியிட்ட அறிக்கை:

குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்த போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியில் எண்கள் உபயோகித்ததில்லை. மேலும், விசாரணையில் மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரியவந்தது. குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2020 சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது.

-விளம்பரம்-

விதிமீறல் இல்லை:

மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிறந்திருக்கிறது. செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வாடகைத்தாய் உறவினராக இருத்தல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும், அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகை தாய் பேருகாலத்தின் போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கரு வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டிருக்கிறது.

வாடகைத்தாய் குழந்தை குறித்த விவரம்:

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஐ சி எம் ஆர் வழிகாட்டுதல் முறைகளின் படி மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்து ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Advertisement