25 லட்சத்துக்கு மனைவியா இருக்க சொன்னார் – கண்ணீருடன் கூறிய விஷால் பட நடிகை. கேட்டது யார் பாருங்க.

0
664
neethuchandra
- Advertisement -

சினிமா வாய்ப்பு இல்லாததால் 25 லட்சத்துக்கு மனைவியாக இருக்க சொன்னான் என்று தன் நிலைமையை குறித்து கண்கலங்கி நடிகை நீது சந்திரா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழில் மாதவன் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. ஆரம்ப காலத்தில் நடிகை நீது சந்திரா விளம்பர படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் 2003 ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தமிழில் யாவரும் நலம் திரைப்படத்திற்குப் பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவான் போன்ற பல படங்களில் நீது சந்திரா நடித்து இருந்தார்.

- Advertisement -

நீது சந்திரா திரைப்பயணம்:

ஆனால், இதுவரை இவர் எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்திலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இறுதியாக தமிழில் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நீது சந்திரா நடனம் ஆடியிருந்தார். பின் பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு சென்று விட்டார்.

நீது சந்திரா அளித்த பேட்டி:

2017 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் டிடி ரங்கோலி என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார் நீது சந்திரா. அதன் பின்னர் சினிமா துறையில் இருந்து முற்றிலும் விலகினார். இருப்பினும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நீது சந்திரா. இந்நிலையில் சமீபத்தில் நீது சந்திரா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பது குறித்து கூறி இருந்தது, என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்வி கதை.

-விளம்பரம்-

சம்பள மனைவியாக கேட்ட நபர்:

2005ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் மாதம் 25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா? என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. இப்போது என்னிடம் பணமே? வேலையோ? இல்லை. மிகவும் கவலையாக உள்ளேன்.

தற்கொலை முயற்சி செய்த நீது சந்திரா:

இத்தனை படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். அதோடு முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை பட ஒத்திகைக்கு அழைத்து இருந்தார். ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்து விட்டார். அதேபோல் ஹாலிவுட்டில் நான் நுழைந்ததை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அவர்களால் நம்ப முடியவில்லை. இதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட பலமுறை எனது மனதில் வந்து சென்றது என்று மனவேதனையில் கண்கலங்கிய படி நீது சந்திரா கூறி இருக்கிறார்.

Advertisement