ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தை உள்ளவரை மூன்றாம் திருமணம் செய்த மௌனம் பேசியதே பட நடிகை.

0
43978
Mounam-Pesiyadhe
- Advertisement -

Pyaar Koi Khel Nahin என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நேஹா பெண்ட்சே. பின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்து உள்ளார். தமிழில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வந்த மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் நடித்து இருந்தார். இருப்பினும் நடிகை நேஹாவுக்கு படங்கள் பெரிதாக பேசப்பட வில்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த படம் எல்லாம் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-
Neha Pendse, Shardul Bayas

- Advertisement -

பின்னர் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இவர் சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை நேஹா பெண்ட்சே. இந்த நிலையில் நடிகை நேஹா பெண்ட்சே அவர்கள் ஷர்துல் பாயாஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பி வருகின்றனர். தொழிலதிபர் ஷர்துல் பாயாஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் தொழிலதிபர் ஷர்துல் பாயாஸ் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : உங்களை விட 7 வயது சிறியவர் என்றால் அதற்கு ஓகேவா ? ரசிகரின் கேள்விக்கு கூச்சமில்லாமல் பதில் அளித்த ரைசா.

இந்த நிலையில் நடிகை நேஹா பெண்ட்சேவை , தொழிலதிபர் ஷர்துல் பாயாஸ் மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் சொல்லாமல் இருந்து வந்தார் நடிகை நேஹா. தற்போது இவர் குறித்து ரசிகர்கள் எழுப்பும் தாறுமாறு கேள்வினால் நடிகை நேஹா அவர்கள் கோபம் அடைந்து உள்ளார். இதனால் அவர் கூறியது, உலகத்தில் எங்கும் நடக்காத விஷயத்தை நான் செய்யவில்லை. நான் மட்டுமே ஒருத்தருக்கு மூன்றாம் தாரமாக போனதாக சொல்கிறீர்கள். உலகத்தில் பல பேர் இந்த மாதிரி திருமணம் செய்தவர்கள் தான். தற்போது கால கட்டத்தில் இது எல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

-விளம்பரம்-

தற்போது கால கட்டத்தில் நல்ல வாழ்க்கை குறித்து இப்படி முடிவெடுக்கிறார்கள். ஏதோ பெரிய தவறு நான் செய்தது போல பேசுகிறீர்களே, இதெல்லாம் சரி கிடையாது. என் வாழ்க்கையில் நான் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது நான் விரும்பி எடுத்த முடிவு ஆகும். இதற்கு ஏன் இப்படி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதி வருகிறீர்கள். ஒரு ஆண் இரண்டு பெண்கள் உடன் உடலுறவில் இருந்தார் என்பதற்காக இந்த சமூகம் அவரை குற்றமாக பார்க்கிறது. அப்படிப் பார்த்தால் யாரும் இந்த உலகத்தில் சரியானவர்கள் கிடையாது. பல பேர் பலருடன் தொடர்பு வைத்து இருக்கின்றார்கள். திருமணத்திற்கு முன்பு பல பேர் உடன் உறவு வைத்திருப்பது தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நார்மலான ஒன்று. இதை ஏன் விமர்சிக்கிரீர்கள். அதோடு நானும் வெர்ஜின் இல்லையே?? இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பீதியை கிளப்பும் வகையில் பதில் கொடுத்து உள்ளார்.

Advertisement