யார் சூப்பர் ஸ்டார் ? விஜயை காக்கா என்று சொன்னாரா ரஜினி ? – பல சர்ச்சைகளுக்கு பதில் அளித்த நெல்சன்

0
2115
Nelson
- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு நெல்சன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை:

அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள். அதோடு ஏற்கனவே கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அப்போதே இது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பிடித்துவிட்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள்.

நெல்சன் அளித்த பேட்டி:

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். இதில் யார் காக்கா, யார் கழுகு என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நடந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நெல்சன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், விஜயை வைத்து எப்படி அப்படி சொல்ல முடியும். அதற்கு வாய்ப்பே இல்லை.

-விளம்பரம்-

ரஜினி-விஜய் குறித்து சொன்னது:

அது சிலர் வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் நாம் சிவப்பு சட்டை போட்டால் அதை வைத்து எதையாவது பேசுவார்கள். ஊதா பேண்ட் போட்டிருந்தால் அதை வைத்து எதையாவது சொல்வார்கள். விஜய் சார் சினிமா துறையில் 30 வருடங்களாக இருக்கிறார். ரஜினி சார் கிட்டத்தட்ட 50 வருடங்களாக இருக்கிறார். இரண்டு பேருக்குமே அவ்வளவு அனுபவம் இருக்கிறது. அவர்கள் இருவருமே நிறைய பார்த்திருப்பார்கள். ரஜினிகாந்த் மிக மிக நல்ல மனிதர். ரஜினிகாந்த் சார் யாரையுமே அப்படி மறைமுகமாக பேசும் ஆள் இல்லை. நீங்கள் அவரது பேச்சை ஒரு பொதுவான விஷயமாக தான் பார்க்க வேண்டும்.

ரஜினி குறித்து சொன்னது:

இங்கு எதை பேசினாலும் அது குறித்து எதையாவது சொல்வார்கள். அவர்கள் பேசுவார்கள் என்று நினைத்தால் நாம் எதுவுமே சொல்ல முடியாதல்லவா? சில பேரிடம் தான் பர்சனல் விஷயம் சொல்ல முடியும். அந்த மாதிரி தான் எனக்கு நடிகர் விஜய் சார். அவர் நான் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் பாலோ செய்து கொண்டே இருப்பார். நானும் அவரிடம் அப்டேட் செய்வேன். அதேபோல் நடிகர் விஜய் சார் ரஜினியை உயரத்தில் வைத்திருக்கிறார். அதிகமாக அவரைப் பற்றி பேசுவார். எப்போதுமே ரஜினி சார் எப்படி இருக்கிறார்? எப்படி அவர் நடிக்கிறார். அவரிடம் பேசும் போது உனக்கு எப்படி இருக்கிறது? என்று பல விஷயங்கள் குறித்து கேட்பார். எப்போதுமே ரஜினி சாரின் மீது அவருக்கு ஒரு தனி கவனம், அக்கறை இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement