‘வாழுங்கள் வாழ விடுங்கள்’ தன் மகனை விமர்சித்தவர்களுக்கு நெப்போலியன் போட்ட உருக்கமான பதிவு

0
422
- Advertisement -

தன் மகன் குறித்த விமர்சனங்களுக்கு நெப்போலியன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவருக்கு தனுஷ், செய்து என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுஷிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்கிற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயன் இல்லாமல் போனது. பின் இவர் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோயை குணப்படுத்தி இருந்தார். இருந்தாலுமே, அந்த நோய் முழுவதுமாக குணமாகவில்லை. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்டு நிலைமை யாருக்கும் நிகழக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கிறார்.

- Advertisement -

தனுஷ் குறித்த தகவல்:

பின் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். தனுஷும் தன்னிடம் இருக்கும் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்திவரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார். தற்போது தனுஷிற்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். சமீபத்தில் தான் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்து தனுஷ் தன்னுடைய instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

நெப்போலியன் மகன் திருமணம்:

மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. அதனால் தனுஷ் இந்தியா வரவில்லை. நெப்போலியன் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரை பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் திருமணம் செய்ய இருக்கிறார். தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், திருமணத்திற்காக தனுஷ் இந்தியாவுக்கு விமானத்தில் வர முடியாத காரணத்தினாலும், கப்பலில் வந்தால் பல மாதத்திற்கு மேலாகும் என்பதாலும் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது.

-விளம்பரம்-

திருமணம் குறித்த தகவல்:

தனது மகன் திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்துடன் நெபோலியன் ஜப்பான் சென்றார். நெப்போலியன் மகனின் திருமணம் நவம்பர் மாதம் நடக்க இருப்பதால் திருமணத்திற்கான வேலைகளை செப்டம்பர் 1-ம் தேதியே தொடங்கி விட்டார்கள். விமானத்தில் பயணித்தால் தனுஷ் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சொன்னதாலே தன் மகனுக்காக சொகுசு கப்பலை நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜப்பானுக்கு போக வேண்டும் என்பது தனுஷுடைய எட்டு வருட கனவாம். அதை தற்போது நெப்போலியன் நிறைவேற்றி இருக்கிறார்.

நெப்போலியன் பதிவு:

தன்னுடைய மகனுக்காக ஒரு மாத காலம் குடும்பத்துடன் நெப்போலியன் கப்பலில் பயணித்து வெற்றிகரமாக நேற்று ஜப்பானுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு நெப்போலியனை அவருடைய நண்பர்கள் உற்சாகமாக வரவேற்று இருக்கிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மகனைப் பற்றிய விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து ஒரு நீண்ட பதிவை நெப்போலியன் போட்டு இருக்கிறார். அதில் அவர், அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே,

எங்கள் முத்த மகன் தனுஷின் 8 ஆண்டுகால கனவு ..! இந்தியாவில் பிறந்தாலும் , சூழ்நிலை காரணமாக
உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதகாலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷ்ன் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்! எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு…! அளவில்லா மனநிறைவு எங்களுக்கு..! சாதித்துவிட்டான்.

இந்த தருணத்தில் ஒருசில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். வாழ்ந்து பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான், வாழ்ந்துதான் பார்போமே “அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது “ இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. அதுபோல் நாம் இந்த உலகைவிட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள். மற்றவரையும் அவர்களது மனம்போல வாழ விடுங்கள். யார் மனதையும் புண் படுத்தாதீர்கள். குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கறது என்பதை மறவாதீர்கள்.

“ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்” எல்லோரையும் வாழ்த்துக்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள். அது உங்களுக்கே ஒருநாள் திரும்பவிடும். எண்ணம் போல்தான் வாழ்க்கை,நன்றாக எண்ணுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள். உலகை நீங்களும் வெல்லலாம். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை. வாழுங்கள் வாழவிடுங்கள்..! நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும் பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் பல என்று கூறி இருக்கிறார்.

Advertisement