‘ஏய் எப்புட்றா Moment’ – ரசிகர்களின் கேலிக்கு உள்ளான பாண்டியன் mess காட்சி. என்ன பாருங்க.

0
674
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து புதிய இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள் மூர்த்தி.

வீட்டு பிரச்னை :

இந்த உண்மையை வீட்டில் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் வீட்டில் அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் சண்டை போட்டு மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே கோபம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று வீட்டை விட்டு துரத்தி விட்ட ஜனார்த்தனன் இப்போது கடையையும் இழுத்து மூடிவிட்டார்.

-விளம்பரம்-

சூப்பர் மார்கெட்டிற்கு சீல் :

இந்த நிலையில் அவர்களது சூப்பர் மார்க்கெட்டும் விவசாய இடத்தில இருக்கிறது என்று சில் வாய்த்த நிலையில் மீண்டும் தங்களுடைய பழைய கடைக்கே திரும்பி வந்துவிட்டனர். மேலும் கதிர் ஹோட்டலை பெண்கள் நிர்வாகிக்க அந்த ஊரில் இருக்கும் ஹோட்டல் நிர்வாகி ஒருவர் சன்டை போட்ட நிலையில் அந்த ஹோட்டலில் ஒருவர் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறார். இவர் இந்த ஹோட்டலின் பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்.

பிரியாணியில் கரப்பான் பூச்சி :

இந்த நிலையில் தான் ஹோட்டலில் ஒருவர் பிரியாணி வங்குகிறார். அதனை ஐஸ்வர்யா பேப்பர் வைத்து அதன் மேலே இழை வைத்து கட்டித் தருகிறார். பின்னர் பிரியாணி வாங்கிய நபர் சிறிய நேரம் கழித்து வந்து பிரியாணியில் கரப்பான் பூச்சி இருக்கிறது என்கிறார். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் அங்கே வந்து சோதித்து ஹோட்டலுக்கு சீல் வைக்கின்றனர்

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் ஐஸ்வர்யா பேப்பர் மற்றும் இலை வைத்து கட்டி கொடுத்தார். ஆனால் அந்த நபர் கொண்டுவந்ததில் சில்வர் பேப்பர் இருந்தது. இதனை பார்வையாளர்களே கண்டுபிடித்த பிறகு சீரியல் தரப்பினர் கண்டுபிடிக்காததை கலாய்த்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் சீரியல் என்றால் பிரச்சனைகள் வரலாம் ஆனால் அதற்காக ஒரு நியாயம் வேண்டாமா? என கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement