பூமர் மாமியாருக்கு பயந்து வீட்டு வேலை செய்ய எதுக்கு Ips ஆன – புதிய சந்தியாவை கழுவி ஊற்றும் ராஜா ராணி ரசிகர்கள்.

0
723
Rajarani
- Advertisement -

ராஜா ராணி சீரியலில் இன்று ப்ரோமோ வெளியான நிலையில் நெட்டிசங்கள் கடுமையாக சந்தியாவை திட்டி வருகின்றனர். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வத்தினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

-விளம்பரம்-

சீரியலின் கதை :

ராஜா ராணி சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால் இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் அம்மா இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரை மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது ராஜா ராணி சீரியலில் கதாநாயகி சந்தியா பல தடைகளையும் மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் சென்று தன்னுடைய சொந்த ஊருக்கே போஸ்ட் வாங்கும் அளவிற்கு வந்துவிட்டார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான் இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் சின்னத்திரை வட்டாரங்களில் தகவல்கள் வந்ததை அடுத்து அதனை உறுதி செய்யும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நடிகை ரியா வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.

ரியா விலகல் :

அந்த வீடியோவில் சிரியலில் இருந்து விலகுவது குறித்து பேசி இருக்கும் ரியா ‘ராஜா ராணி தொடரில் அடித்து ஒரு வருடங்கள் ஆகப் போகிறது இந்த வருட வருடத்தில் நான் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை ஆனால் இப்போது போடுகிறேன் ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை இனி நான் சந்தியா இல்லை சந்தியாவாக வேறு ஒருவர் பண்ணப் போகிறார் அவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ப்ரோமோ :

இந்நிலையில் தற்போது ராஜா ராணி சீரியலில் புதிய சந்தியாவாக ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் நடித்து வரும் ஆஷா கௌடா தான் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். இவை ஒருபக்கம் இருக்க இன்று வெளியான ராஜா ராணி சீரியலின் ப்ரோமோவில் சஷ்டி விரதம் என்பதினால் சிவகாமி மற்றவர்களை திட்டிகொண்டே வீடு துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தற்கொலை வழக்கு ஒன்றை முடித்து விட்டு வரும் சந்தியா அப்படியே வீட்டிற்கு வருகிறார்.

சந்தியாவை தீட்டும் நெட்டிசன்கள் :

இத்னை பார்த்த அவரின் மாமியார் வீட்டை சந்தியா மீண்டும் துடைக்க கூறுகிறார். இந்நிலையில் மீண்டும் சந்தியா போலீஸ் உடையை மாற்றாமலேயே வீட்டை துடைத்து வருகிறார். இந்த நிலையில் சந்தியாவிற்கு கீழ் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் சந்தியாவை காண வருகிறார். இப்படி இந்த ப்ரோமோ இருக்கும் நிலையில் மாமியாருக்கு பயந்து வீட்டை துடைக்கும் சந்தியாவை நெட்டிசன்கள் தீட்டி வருகின்றனர். மேலும் அந்த பூமர் மாமியாருக்கு பயந்து வீட்டு வேலை செய்யும் நீ எதற்கு ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என நினைக்கிறாய் என்று கடுமையாக தீட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement