CWCயில் இருந்து விலகிய தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஆதரவாக நெட்டிசன்கள் போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.
இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும் இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா, பூஜா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் வெளியேற்றி இருந்தார்கள். கடந்த வாரம் செமி பைனல் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியதாக போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
குக் வித் கோமாளி 5:
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
This war not raised now, it was started from first 😳😳😲 #Manimegalai #Priyanka #Cookwithcomali5 #PriyankaDeshpande pic.twitter.com/atP3qHBDBB
— thenWhen (@thenwHen_) September 16, 2024
மணிமேகலை பதிவு:
அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். இதற்கு முன்பு போல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை. இது என்னுடைய 15-வது ஆண்டு நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. ஆனால், இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது. எல்லோருக்கும் நன்றி என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
நிகழ்ச்சியில் ப்ரியங்கா சொன்னது:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். சிலர் ப்ரியங்காவின் செயலை விமர்சித்தும் , கண்டித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒரு எபிசோடில் மாட்டிற்கு பால் கறக்க சொல்லி இருந்தார்கள். அதில் பிரியங்கா பால் கறக்க சென்றிருந்தபோது மணிமேகலை- ரக்சன் இருவரும் மாடு பிரியங்காவை தூக்கி விட்டது என்றால், நீ சூப்பர் சிங்கர் எடுத்துக்கொள்.
#Priyanka vanmam on #Manimegalai 🥴👎🏻
— 𝐱𝐒𝐡𝐚 (@sha_tweetz) September 16, 2024
Thonda thonda kedachutae iruku 😌#CookwithComali5 #PriyankaDespande pic.twitter.com/lNjRALBJu6
நெட்டிசன்கள் விமர்சனம்:
நான் ஸ்டார்ட் மியூசிக் எடுத்துக் கொள்கிறேன் என்று ஜாலியாக சொல்லி இருந்தார். இதை பிரியங்கா மனதில் வைத்து கொண்டு வன்மத்துடன் பேசி இருந்தார். அதேபோல் நிகழ்ச்சியில் உள்ள பல பேரை பிரியங்கா தன் பக்கம் இழுத்து கொண்டு மணிமேகலையை கிண்டலாக பேசி வம்பு இழுத்து இருக்கிறார். இப்படி இந்த விவகாரம் தொடர்பாக நெட்டிசன்கள் ப்ரியங்காவிற்கு எதிராக பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் . தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிரியங்கா- மணிமேகலை விகாரம் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.