அதிக பொருட்செலவு, 4 நாயகிகள், 50 துணை நடிகர்கள் – எதிர் நீச்சலை மிஞ்சுமா இந்த புதிய தொடர்

0
4064
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலை மிஞ்சும் அளவிற்கு அதிக பொருட் செலவில் புதிய சீரியலை சன் டிவி நிறுவனம் தயாரிக்க இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சமீப காலமாக, கொரோனா காலகட்டத்திலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

இதனால் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் புது வித்தியாசமான கதைக் களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். வாரத்தின் முதல் நாள் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும், காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசையாக டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட, சின்னத் திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனலாக சன் டிவி திகழ்கிறது.

- Advertisement -

சன் டிவி தொடர்கள் :

மேலும், இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் இல்லத்தரசிகள் மத்தியில் வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே பார்த்து வருகிறார்கள். இதனாலேயே புது புது தொடர்களை சன் டிவி வெளியிட்டு வருகிறது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியல். எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல் :

மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். தற்போது பல அதிரடி திருப்பங்களுடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் சீரியல் சென்று கொண்டு இருக்கின்றது.

-விளம்பரம்-

புதிய சீரியல் குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் நான்கு கதாநாயகிகள், 30 துணை கதாபாத்திரங்கள் என பிரம்மாண்டமாக இந்த சீரியலை இயக்குனர் இயக்கி வருகிறார். இது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் தான் இந்த சீரியல் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில், சன் டிவியில் புதிய தொடர் வெளி வர இருக்கின்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சன் டிவி அதிக பொருட் செலவில், ஒரு புதிய தொடரை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தொடர்
உருவாக்கப்படுகிறது.

புதிய தொடர் தயாரிக்கும் நிறுவனம் :

மேலும், இந்த தொடரை கண்ணான கண்ணே சீரியலை தயாரித்த சன் என்டர்டெயின் மென்ட் நிறுவனமும், ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் தான் கண்ணானே கண்ணே தொடர் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக இயக்க இருக்கும் தொடரில் நான்கு கதாநாயகிகள், 50 துணை கதாபாத்திரங்களையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு இணையான காட்சிகளையும், கொண்டு மெனக்கட்டு இந்த சீரியலை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது என்ன தொடர்? இந்த தொடரில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் ? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Advertisement