“சிரஞ்சீவி குடும்பத்தில் விவாகரத்து” திருமணமான மூன்றே ஆண்டுகளில் பிரிந்த கணவன் மனைவி – யார் தெரியுமா?

0
1702
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. தெலுங்கு வட்டாரத்தில் இவர் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது விவாகரத்து பெற்றுள்ளார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நடிகை நிஹாரிகா கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான். அதற்கு பிறகு சைதன்யா என்பவருடன் கடந்த 2020ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இவர்களது திருமணம் கோலாகலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதயப்பூர் அரண்மனையில் நடந்தது. இதில் அல்லு அர்ஜின், ராம் சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அவருடைய தந்தை காவல்துறையில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களிலேயே நிஹாரியாவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னையினால் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து எந்த தகவல்களையும் இருவரும் கூறவில்லை. இப்படியொரு நிலையில் தான் சட்ட ரீதியாக இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் நடிகை நிஹாரிகா இது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார். அதனை பல தெலுங்கு ஊடகங்களில் இருவரும் பிரித்து விட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

நிஹாரிகா போட்டிருந்த அந்த பதிவில் நானும் சைதன்யாவும் பரஸ்பரமாக பிரிக்கிறோம். உங்களுடைய கனிவும் பண்பும் தேவைப்படுகிறது. எங்களுக்கு இதுவரையில் உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. எங்களுக்கு இப்போது புதிய வாழ்வை ஏற்படுத்தி கொள்ள ப்ரைவசி வேண்டும் என் அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இத்னானிடையே இருவரும் பரஸ்பரமான பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து நிஹாரிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement