அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்லறாரு, இரண்டாம் கணவர் செய்த கொடுமை. நீதிமன்றம் ஏறிய NINI தீபா

0
562
- Advertisement -

தன்னுடைய கணவருடன் சேர்த்து வையுங்கள் என்று குடும்ப நல நீதிமன்றத்தை நடிகை சின்னத்திரை சீரியல் நடிகை தீபா தொடர்ந்து இருக்கும் வழக்கு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசனை போல இரண்டாம் சீஸனும் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் வில்லி ரோலில் நடித்தவர் தீபா. இவர் ஏற்கனவே ‘அன்பே சிவம்’ போன்ற பல தொடரிலும் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் அளவு முன்னேறினார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடர் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

- Advertisement -

தீபா குறித்த தகவல்:

இதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி தொடரில் நடித்து இருந்தார். இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவரின் குடும்ப ப்ரச்சனை கடந்த ஆண்டு தான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி இருந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களை தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து இருப்பவர் கணேஷ் பாபு.

தீபா திருமணம்:

ஆரம்பத்தில் இவருக்கும் தீபாவுக்கும் இடையே நட்பு உண்டானது. பின் இவர்களுடைய நட்பு காதலாக ஆனது. இருவருமே சில வருடங்கள் கணவன் மனைவியாக ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு கணேஷ் பாபுவுக்கும் தீபாவுக்கும் திருமணம் நடந்தது. இது தொடர்பாக தீபாவே சோசியல் மீடியாவில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால், இவர்களுடைய திருமணத்தை கணேஷ் பாபுவின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

-விளம்பரம்-

தீபா திருமணம் குறித்த சர்ச்சை:

இதனால் கணேஷ் பாபு, தன்னுடைய குடும்பத்திடம் சம்மதம் வாங்கி வந்து அழைத்து செல்வதாக தீபாவிடம் சொல்லி கிளம்பி சென்றிருக்கிறார். அதற்கு பின் கணேஷ் பாபு வரவே இல்லை. பின் தீபா அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த பதிலுமே கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பின் இது குறித்து அவர் பேட்டியில் கூறி இருப்பது, நாங்கள் திருமணம் செய்தது சின்னத்திரை வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்குப் பிறகு எங்களுடன் சேர்ந்து வாழ மறுத்து அவர் வீட்டிலேயே இருக்கிறார்.

பேட்டியில் தீபா சொன்னது:

அவரும் விருப்பப்பட்டு தான் எங்களுக்கு கல்யாணம் நடந்தது. ஆனால், இப்ப வரை அவர் அவர்களுடைய வீட்டில் கிட்டதட்ட ஹவுஸ் அரட்ஸ்ட் மாதிரி தான் அவரை பண்ணி வைத்திருக்கிறார்கள். நான் அவரை தேடிப்போன போதும் அவரின் அம்மா என்னை ஜாதியை சொல்லி திட்டி அனுப்பி விட்டார். போலீசுக்கு போனேன். ஆனால், அவருடைய குடும்பப் பின்னணி காரணமாக போலீசும் என் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான் நான் நீதிமன்றத்தை நாடி போனேன். அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு தான் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிமன்றத்தில் எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Advertisement