NINI பின் ரஷிதா நடிக்கும் முதல் சீரியல், ஹீரோ விஷ்ணு இல்லை இவர்தான் – வெளியான புகைப்படம் இதோ.

0
1943
rachitha
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமாக போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் பல சீரியல்கள் டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீரியல்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட சேனல் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர், நடிகைகள் தற்போது வேறு வேறு சேனலுக்கு மாறியும் வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நடிகர்,நடிகை சென்று உள்ளனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-178-1024x468.jpg

தற்போது கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியலாக இது சொல்ல மறந்த கதை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் மார்ச் 7 ஆம் தேதி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், இதற்கான புரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலின வேறுபாடுகளை, ஆண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு சமையல் கற்றுக் கொண்டு திருமணம் செய்ய வேண்டும் போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

இது சொல்ல மறந்த கதை சீரியல்:

திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் என்று பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது.

இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக ரக்ஷிதா நடிக்கிறார். தன் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு பல போராட்டங்களை சந்தித்து வாழும் பெண்ணின் கதை. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சத்யா என்ற தொடரில் விஷ்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அப்போ விஷ்ணு இல்லையா :

தற்போது இவர் கலர்ஸ் தொடரில் நடிக்க இருப்பதால் இவர் சத்யா சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இந்த தொடரில் ரக்ஷிதாவிற்கு ஜோடியாக வேறு ஒருவர் நடிக்க இருக்கிறார். தற்போது ரச்சிதா இரண்டு குழந்தைகள் உடன் வேறு ஒருவர் உடன் இருக்கும் போட்டோ வைரல் ஆகி வருகிறது. அப்போ விஷ்ணு ஹீரோ இல்லையா என நெட்டிசன்கள் கேட்க, அந்த போட்டோ பிளாஷ்பேக் காட்சியில் வரும் ரச்சிதாவின் கணவர் தான். கணவர் இறந்தபிறகு தனது இரண்டு குழந்தைகளை எப்படி வளர்க்கிறார் என்பது தான் சீரியலின் கதையாக இருக்கும் என தெரிகிறது. இந்த தொடர் வரும் திங்கள் முதல் வெளியாக இருக்கிறது.

Advertisement