குழந்தை பிறந்த பின் நிஷா கணேஷ் நடிக்கும் முதல் சீரியல் – அட, அதுவும் இந்த சூப்பர் ஹிட் தொடரில்.

0
652
nisha
- Advertisement -

சூப்பர் ஹிட் சீரியல் மூலம் நடிகை நிஷா கணேஷ் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்தார். பிறகு தான் நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, தலையனை பூக்கள், மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் நிஷா படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட்டின் மனைவி என்பது குறிப்பித்தக்கது. கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனிடையே நிஷா- கனேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

நிஷா திரைப்பயணம்:

இவர்களுக்கு சமைரா என்ற மகளும் இருக்கிறாள். கடைசியாக இவர் 2020ம் ஆண்டு திருமகள் தொடரில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பின் நிஷா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் சீரியலில் நடிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் MY3 வெப் சீரிஸில் நிஷா நடித்துக்கொண்டிருக்கிறார்.

செம்பருத்தி சீரியல்:

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலின் மூலம் நடிகை நிஷா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்று வருகிறது. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 இந்த ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது.

-விளம்பரம்-

தெலுங்கு சீரியல் தழுவல்:

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார்.

சீரியலில் நிஷா நடிக்கும் ரோல்:

தற்போது தொகுப்பாளர் அக்னி, ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றாலும் தற்போது சீரியல் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நிசா கணேஷ் வக்கீலாக நடிக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நிஷாவிற்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Advertisement