நித்யாமேனன் வீட்டில் நடந்த சோகம் – அவரின் உருக்கமாக பதிவை கண்டு ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்

0
1788
- Advertisement -

நடிகை நித்யா மேனன் வீட்டில் நடந்திருக்கும் துக்க சம்பவம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு பிறகு அம்மணி பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன் உருவக் கேலிக்கும் உள்ளாகி இருந்தார்.

- Advertisement -

நித்யா மேனன் திரைப்பயணம்:

இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு இருந்தார். அதன் பலனாக இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். சமீபத்தில் நித்யா மேனன் உடலை குறைத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.

நித்யா மேனன் நடிக்கும் படம்:

தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி இருக்கிறார். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.. இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் வீட்டில் சோக சம்பவம் நடந்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நித்யா மேனனின் தாய் வழி பாட்டி தற்போது இறந்திருக்கிறார். இதனால் தான் நித்யா மேனன் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.

மேலும், இது குறித்து நித்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டியுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. என் அம்மம்மா(பாட்டி) மற்றும் என்னுடைய தாத்தாவை பிரிந்து விட்டேன். அவர்களை வேறொரு உலகில் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார். தற்போது நித்யா மேனன் இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

Advertisement