தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்து உள்ளார். நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலையில் பிறந்தார். இவர் தன்னுடைய 12 வயதிலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் திருநெல்வேலியில் உள்ள அமெச்சூர் நாடகக் குழு ஒன்றில் நடிக்கச் சேர்ந்தார். பின் நால்வர் எனும் சமூக நாடகத்தில் தன்னுடைய 12 வயதிலேயே நான்கு கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்தார் நாஞ்சில் நளினி. பின்னர் இவர் வைரம் சபா நாடக சபாவில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டார். இதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
பி.மாதவனின் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த “எங்க ஊர் ராஜா” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை நாஞ்சில் நளினி நடித்தார். அதற்கு பிறகு இவர் அதிகமாக சிவாஜி கணேசன் படத்தில் தான் நடித்து வந்தார். சிவாஜி நடிப்பில் வந்த அண்ணன் ஒரு கோயில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் போன்ற பல படங்களில் இவர் நடித்து உள்ளார். அதோடு இவர் தர்மயுத்தம், ஆடுபுலி ஆட்டம், ரசிகன் ஒரு ரசிகை, அன்னை அபிராமி உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை நளினி அவர்கள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், நாடகங்கள், சினிமா என்று கலைத்துறையில் வளர்ந்த காலத்தில் இவர் தனியாக “ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்” என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். பின் படிப்படியாக இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தது.
பிறகு நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். குட்டி பத்மினியின் மந்திரவாசல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் மோகனின் அச்சம் மடம் நாணம், பிருந்தாவனம், சூலம் போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். 1978ஆம் ஆண்டு தமிழக அரசு இவருடைய நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது. நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது நடிக்கத் தொடங்கியவர்.
வயதானாலும் தன்னுடைய நடிப்பை விடாமல் நடித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளார்கள். சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்து உள்ளார். நாஞ்சில் நளினி. இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பால் அகால காலமானார். தற்போது அவருக்கு 74 வயது ஆகிறது. நாஞ்சில் நளினி அவர்களின் இழப்பு நாடகம் மற்றும் சினிமா திரைப்படத்துறைக்கு மாபெரும் இழப்பு. அவருடைய மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.