சிறுமியை கர்ப்பமாக்குவேன் என பாடிய புள்ளிங்கோ பாடகர் – திருமா முன் அவர் பாடிய பழைய வீடியோ தற்போது வைரல்.

0
1115
saran
- Advertisement -

எட்டாம் வகுப்பு மாணவியை கரபமாக்குவேன் என்று மேடையில் கானா பாடகரின் வீடியோவை பகிர்ந்து அவர் மீது போஸ்க்கோ சட்டம் பாய வேண்டும் என்று இயக்குனர் மோகன் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கானா பாடகரை போலீசார் தேடி வருகிறது. தமிழ் நாட்டில் கானா பாடல் ஒரு முக்கிய கலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தேவா துவங்கி தற்போது இருக்கும் கானா பாலா வரை பல கானா பாடகர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்கள் தான்.

-விளம்பரம்-

கானா பாடகரின் சர்ச்சை பாடல் :

இந்த நிலையில் கானா பாடகர் ஒருவர் மேடையில் 8 ஆம் வகுப்பு சிறுமியை கற்பமாக்குவேன் என்ற வரிகளை அடங்கிய கானா பாடலை பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் கடந்த 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர். 

- Advertisement -

சிறுமி குறித்து மோசமான வரிகள் :

அப்போது புல்லிங்கோ ஹேர் சட்டையில் இருக்கும் சரவெடி சரண் பாடும் போது “மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி) பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை.” என பாடியுள்ளார் இந்த வீடியோ தான் தற்போது இவரை போலீஸ் தேடும் அளவிற்கு வம்பில் சிக்க வைத்து இருக்கிறது. இதுகுறித்து பதிவிட்ட ட்விட்டர் வாசி ஒருவர், ‘8 வது படிக்கும் சிறுவயது சிறுமியை கர்பமாக்குவோம், ஏன்னா அப்போ தான் எங்கள விட்டு போவாது,பெண்கள் இந்த நாடக காதல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொந்தளித்த நெட்டிசன்கள் :

கானா பாடல்கள் என்றாலே தற்போது மிகப் பெரிய கவனத்தை பெற்று வருகின்றன. அதில் இயங்கும் பலர் அரசியல், சமூக கருத்து, நையாண்டி என ஆரோக்கியமான வகையில் பாடல் உருவாக்கு வரும் நிலையில் இப்படி பெண் குழந்தையை அசிங்கப்படுத்தப்படும் இந்த பாடல் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

பாடகரை தேடும் போலீஸ் :

இந்த வீடியோ திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளவர், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ‘சிறப்பு, வாழ்த்துக்கள் தமிழ் நாடு போலீஸ்’ என்று பதிவிட்டுள்ளார்.

திருமாவுடன் சரவெடி சரண் :

அதே போல நெட்டிசன்கள் பலர் இப்படி பெண் குழந்தைகளை கேவலப்படுத்தும் வகையில் பாடி இருக்கும் இவர் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சரவெடி சரண், விசிக தலைவர் திருமாவளவன் முன் பாடும் வீடியோ ஒன்றை தற்போது நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement