தொடரும் தீண்டாமை கொடுமைகள்? – சேலம் இளைஞர் தாக்கப்பட்டதற்கு கொதித்தெழுந்த பா.ரஞ்சித்

0
482
- Advertisement -

சேலம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் சென்றதினால் திமுகவை சேர்ந்த ஒருவர் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளினால் திட்டியது வைரலானதை தொடர்ந்து அதற்கு கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் திருமலைகிரி என்ற பகுதியில் நடந்துள்ளது. அங்கு பட்யலினத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் அந்த ஊரில் உள்ள உயர்சாதி கட்டுப்பாடுகளை மீறி அங்குள்ள மாரியம்மன் கோலிவிலுக்குள் சென்று வழிபாடு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளினால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார் திமுக ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம். இப்படிப்பட்ட நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி மக்களுக்கு அவப்பெயர் ஏற்படும் படி செயல்பட்டதால் காரணமாக அவரை அடிப்படை உரிமை மற்றும் அணைத்து பணிகளில் இருந்தும் மாணிக்கத்தை தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்துள்ளார் திமுக பொதுச் செயலாளர் துறை முருகன்.

- Advertisement -

இளைஞரை தகதவாறு பேசிய திமுக செயலாளர் :

இது சம்பவம் குறித்து காவல் துறையில் புகாரளித்த அந்த நபர் கொடுத்துள்ள மனுவில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் அவர் கூலி வேலை பார்த்து பிழைத்து வருகிறார். அவர்கள் ஊரில் அரசுக்கு சொந்தமாக ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. அதற்கு ஊர் மக்கள் சார்பில் திருவிழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரவு கோவிலுக்குள் சென்று வழிபாடு சேந்த அந்த நபரை 27/02/2023 அன்று காலை அந்த கோவில் வாசலில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடச்சலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இவரை பொதுமக்கள் முன்னர் தகாத வார்த்தைகளினால் மிரட்டியுள்ளனர்.

கைது செய்த போலீசார் :

“மேளம் அடிக்கும் நாய்கள் கோவிலுக்குள் வரலாமா” என்று கடுமையாக தகாத வார்த்தைகளினால் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சாதியை காரணமாக வைத்து நெஞ்சில் தாக்கியும் உள்ளார் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம். இந்நிலையில் பெற்றோர்களும் அந்த இளைஞர்களும் கெஞ்சியதை அடுத்து அங்கிருந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தன்னை தாக்கி தகாத வார்தைகள் பேசியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கி எடுக்குமாறு போலீசில் புளகாரளித்ததை அடுத்து மாணிக்கத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.

-விளம்பரம்-

பா. ரஞ்சித் ட்விட் :

இப்படி பட்ட நிலையில் தான் இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “பெரியார், அண்ணா முன் வைத்த பிராமன&சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூகமாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி!!!

தொடரும் தீண்டாமை ? :

நீதி கட்சி தொடங்கி இன்று வரையிலான தமிழக கட்சிகளின் அரசியல் என்பது, அரசியல் மற்றும் அதிகார மாற்றத்திற்க்கா? சமூக மாற்றத்திற்க்கா? ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்கு கோயில் திறப்பு! ஒரு பக்கம் பட்டியலின இளைஞன் கோயில் நுழைவு பெரூம் குற்றம்!..தொடரும் தீண்டாமை கொடுமைகள்? என்று இந்த விஷியம் குறித்து தன்னுடைய கன்டனத்தை வைத்துள்ளார் பா.ரஞ்சித். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியால் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Advertisement