ஈஸ்வர்- மஹாலக்ஷ்மியை தொடர்ந்து,அடுத்த பஞ்சாயத்தை துவங்கிய பகல் நிலவு ஜோடிகள். புலம்பும் மனைவி.

0
154655
pagal-nilavu
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி விவகாரம்தான் சமூகவலைதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் தொடரில் இணைந்து நடித்த ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி தாகவும் ஈஸ்வரின் மனைவியான ஜெயஸ்ரீ பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் டிவி ஜோடிகள் இதேபோன்ற பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
அஸீம்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை அஸீம். தற்போது இவருக்கும் பகல் நிலவு தொடரில் நடித்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அஸீமுடன் நடித்த சிலர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் இது குறித்து அந்த குறிப்பிட்ட பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மூன்று வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இடையில் தற்போது பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று இருக்கிறது என்று அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியதாக அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் அசீம் நடவடிக்கை குறித்து டெக்னீஷியன் ஒருவர் பேசியுள்ளது என்னவெனில் அந்த பொண்ணு மிகவும் பாவம் சார் எங்களை பொறுத்தவரை இவர் மேல் தான் தப்பு அவருடைய குணமே அப்படித்தான். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அங்கு இவர் படப்பிடிப்பு தளத்தில் செய்த சில செயல்பாடுகள் பிடிக்காததால் அந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதில் அவருக்கு ஜோடியாக ஒரு பெண் அறிமுகமானார். அது தற்போதுதான் பள்ளிக்கூடம் செல்லும் பெண். ஆனால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் அசீம் வீட்டில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை ஷூட்டிங் ஸ்பாட் வரை வந்து விட்டது அதன் பின்னர் தான் எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இப்போது எந்த விஷயத்தில் அஸீம் தனது மனைவியை டார்ச்சர் செய்து வருவதாகவும் கூறுகிறார்கள் என்று அந்த டெக்னீசியன் கூறியிருக்கிறாராம்.

-விளம்பரம்-
பகல் நிலவு காட்சி

அதேபோல அஸீமுடன் நடித்த அந்த நடிகையும் அடுத்த சீரியலில் நடித்தால் அவருடன் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறாராம். ஆனால், இந்த விஷயம் அசினின் மனைவி காதுக்கு செல்ல கமிட்டான சில மாதங்களிலேயே அந்த தொடரிலிருந்து அந்த இளம் நடிகை மட்டும் நீக்கப்பட்டு இருக்கிறாராம். மேலும், இதுகுறித்து அஸீம் மனைவி அந்த பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கையில் எங்களுக்குள் பிரச்சினை சென்று கொண்டு இருக்கிறது உண்மைதான். நாங்கள் இருவரும் தற்போது ஒன்றாக வசிக்கவில்லை என்பதும் உண்மை தான். மேலும் உடன் நடித்த நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருந்ததும் உண்மை தான் .இது குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை இந்த விவகாரம் வெளியில் வரும்போது வரட்டும் என்று கூறியுள்ளாராம் அசீம் மனைவி சோயா ஆனால், இதுகுறித்து அசீமிடம் கேட்கப்பட்டபோது அதெல்லாம் வெறும் வதந்தி தான் அதில் உண்மையில்லை என்று மிகவும் சுருக்கமாக முடித்து விட்டாராம். எனவே ,விரைவில் ஈஸ்வர் மகாலட்சுமி போன்று அசின் பஞ்சாயத்தும் விரைவில் சின்னத்திரையில் தலையெடுக்கும் என்று கூறப்படுகிறது

Advertisement