விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று, பின்னர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌந்தர்யா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சௌந்தர்யா, தனக்கு பிடித்த சினிமா நடிகர்கள் பற்றி கருது தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவ்ர்ட்ஸ் விழாவில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வரும் ஆளப்போரா என்ற பாடலை படியுள்ளாராம். மேலும் மெர்சல் படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அந்த படத்தில் வரும் அப்பா விஜயை கண்டால் அவரை தூக்கி சென்றுவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் பற்றி பேசிய சௌந்தர்யா ' மெர்சல் படத்தில் அப்பா வேடத்தில் வரும் விஜய் மட்டும் கிடைத்தால், அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் எனது வீட்டில் வைத்துக் கொள்வேன், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் அழகன்' என்று விஜய்யை பற்றி ரசனையுடன் கூறியுள்ளார்.




