தமிழா தமிழாவை தொடர்ந்து வா தமிழா வா நிகழ்ச்சியில் இருந்து விலகல் – கரு பழனியப்பன் சொன்ன விளக்கம்

0
294
- Advertisement -

வா தமிழா வா நிகழ்ச்சியில் இருந்து மீண்டும் கரு பழனியப்பன் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு. பழனியப்பன். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல பட்டிமன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் 1994 ஆம் ஆண்டில் சினிமாவிற்குள் நுழைந்தார். முதலில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றியிருந்தார். ஆரம்பத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதற்கு பின் இரண்டு வேறு இயக்குனர்களின் கீழும் பணிபுரிந்தார். பின் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகியவற்றின் இயக்குனர் எழிலிடமும் பழனியப்பன் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் நடிகராகவும் இயக்குனராகவும் ஆனார்.

- Advertisement -

பழனியப்பன் குறித்த தகவல்:

மேலும், பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் தான் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கி இருக்கிறார். பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி நன்றாக தான் சென்றது. ஆனால், திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து பழனியப்பன் விலகிவிட்டார். இவர் வெளியேறிய காரணம் தெரியவில்லை. அதற்கு பிறகு வேறு ஒரு தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கரு பழனியப்பன் பேட்டி:

இதை எடுத்து இவர் சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி குறித்த புது புரோமோவில் வேறொரு தொகுப்பாளர் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து கரு பழனியப்பன் பேட்டியில், நான் இந்த வா தமிழா வா நிகழ்ச்சியில் இருந்து விலகியது உண்மை தான்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் இருந்து விலகிய காரணம்:

அதற்கு காரணம் நீங்க நினைக்கிற மாதிரி சர்ச்சைக்குரிய காரணங்கள் கிடையாது. பணி சுமை காரணமாக மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகி இருக்கிறேன். மற்றபடி எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் ஆரி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஆரி அர்ஜுனன். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரி குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து இவர் மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த சீசனில் முதல் இடத்தை ஆரி தான் பிடித்து இருந்தார். அதற்குப் பிறகு ஆரி அவர்கள் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்குவது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement