மீண்டும் நின்று போன பழனியின் திருமணம், கோமதி அண்ணன்கள் செய்த சதி வேலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
161
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர்- ராஜி இருவருமே சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள். பாண்டியன், பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்தார். அதை அடுத்து வீட்டில் பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் அப்பத்தாவும் அவருடைய மருமகள்களும் வெளியே நின்று பார்த்து சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து பழனியின் அண்ணன்கள் வந்தார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பழனி தடுமாறி கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அவர்களுமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்தார்கள். உடனே அப்பத்தா, தயவுசெய்து இந்த கல்யாணத்தில் பிரச்சினையும் செய்ய வேண்டாம். என் மகன் ஏதாவது செய்து கொள்வான். அவனை வாழ விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். நேற்று எபிசோட்டில் பழனி தன்னுடைய கல்யாண வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவருடைய அண்ணன்கள் கோபப்பட்டார்கள். பின் பழனியை அழைத்து அவர்கள் இருவருமே பேசினார்கள். ஆனால், பழனி எதுவும் சரியாக பதில் சொல்லாமல் இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே அவருடைய அண்ணன்கள், இந்த முறை நாங்கள் கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம். நீ தைரியமாக இரு. நாங்களும் கல்யாணத்துக்கு வருகிறோம் என்று சொன்னவுடன் பழனி- அப்பத்தா இருவருமே ஷாக் ஆனார்கள். சந்தோஷத்தில் பழனி தன்னுடைய அண்ணன்களை கட்டிபிடித்து நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் தடைபடலாக எல்லோருமே பழனியின் கல்யாணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். அரசி, தங்கமயில் நகையை கேட்டவுடன் அவர் பயத்தில் என்னென்னவோ சொல்லி சமாளித்தார்.

நேற்று எபிசோட்:

பின் அரசி தன்னுடைய தோழிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது வந்த சக்தி, அரசி இடம் பேச, அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் சக்தி ஒளிந்து கொண்டார். நேற்று எபிசோட்டில் பழனியில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடந்தது. பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பழனியின் திருமணத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மணமேடையில் பழனி, மணப்பெண் கலந்து கொண்டிருக்கிறார்கள். பழனிக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அந்த நேரம் பார்த்து பெண்ணுடைய பெற்றோர்கள், இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை. கல்யாணம் நடக்காது என்று பெண்ணின் கையை பிடித்து மணமேடையில் இருந்து எழுப்புகிறார்கள். உடனே
அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம், என்ன ஆனது? என்ன பிரச்சனை? பேசிக்கொள்ளலாம் என்று நாங்கள் எல்லா உண்மையும் சொல்லிவிட்டோம் என்று மாறி மாறி பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பெண் வீட்டில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் பெண்ணின் வீட்டிற்கு பழனியின் அண்ணன்கள் சென்று கல்யாணத்தை நிறுத்த பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் பழனியின் சின்ன அண்ணன், பழனிக்கு ஆண்மை இல்லை. அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. டாக்டர் சொல்லி இருக்கிறார்கள் என்று பொய்யான ஒரு விஷயத்தை சொன்னவுடன் பெண் வீட்டிலும் நம்பி விடுகிறார்கள். இந்த காரணத்தை வைத்து தான் பழனி திருமணத்தை நிறுத்துகிறார்கள். ஆனால், பெண் வீட்டார் காரணம் வெளியே சொல்லாமல் கல்யாணம் நடக்காது என்று கிளம்புகிறார்கள். இதனால் மொத்த குடும்பமே இடிந்து போகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement