வேலை விஷயத்தில் மீனா கேட்ட கேள்வி, உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
189
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்தார். அப்போது வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு மீனா கொடுத்தார். பின் இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். உடனே கோமதி, மீனாவின் அம்மாவை பார்க்க வந்து விட்டார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனார். அப்போது அவர், வேலைக்கு போகவில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்ல, சரவணன் நம்பி சம்மதித்தார்.
பின் இதை தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். நேற்று எபிசோட்டில் கதிரின் நிலைமையை நினைத்து அப்பத்தா ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி இடம் கதிரை பற்றி விசாரிக்க, அவர் வெளியில் வந்து நின்று பேசு என்றார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது பேரனை பார்க்க உள்ளே வாருங்கள் என்று எல்லோரும் அப்பத்தாவிடம் கெஞ்சி இருந்தார்கள்.
உள்ளே வந்தால் தேவையில்லாமல் பிரச்சனை வர வேண்டாம் என்று அப்பத்தா சொல்லியும, ராஜி- கோமதி விடவில்லை. ஒருவழியாக அப்பத்தாவை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டார்கள். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தது. கதிர் தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் செந்திலுக்கு போன் செய்த மீனா, அப்பத்தா வீட்டிற்கு வந்த விஷயத்தை சொன்னவுடன் சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:

பின் அதை தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அந்த சமயம் பார்த்து அப்பத்தா வெளியே வந்தார். அப்போது ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லோருமே வந்து விட்டார்கள். இதனால் என்ன நடக்குமோ? என்று அப்பத்தா, பாண்டியன் குடும்பமும் தவிப்பில் நின்றது. அப்போது ராஜியின் அப்பா, நீ உறவை ஒட்ட வைக்கிறாயா? இனிமேல் இந்த குடும்பத்திற்கு உனக்கும் எந்த சவகாசம் இல்லை என்று குலதெய்வ சாமி மீது சத்தியம் செய்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

ஒரு வேளை முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று மோசமாக தன்னுடைய தாய் என்று கூட பார்க்காமல் திட்டி இருந்தார். இதனால் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், ராஜியின் அப்பா சித்தப்பா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதனால் பயங்கர கலவரமே நடந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன், உன்னை வேலைக்கு வர சொல்லி போன் செய்கிறார்கள். கிளம்பவில்லையா? என்று தங்கமயிலிடம் கேட்கிறார். இதனால் தங்கமயில் ரொம்ப பதட்டப்படுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதையெல்லாம் மீனா-ராஜி இருவரும் கவனித்து விடுகிறார்கள். அதற்கு பின் சரவணனிடம் தங்கமயில், நான் வேலைக்கு போகவில்லை. எப்படியாவது மாமாவிடம் பேசுங்கள். நான் வீட்டில் இருந்து உங்களை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல, அப்பா எடுத்த முடிவுக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது என்றார் சரவணன். பின் மீனா -ராஜி, உங்களுடைய சர்டிபிகேட்டில் ஏதாவது பிரச்சனையா? நகை விஷயத்தை மறைத்தது போல இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று கேட்க, தங்கமயில் திருத்திரு என்று விழிக்கிறார்.

Advertisement