வேலைக்கு போகும் தங்கமயில், செந்திலை ஏற்றுக் கொண்டாரா மீனாவின் அப்பா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
154
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ராஜி, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கண்ணன் தான் நகையை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்றவுடன் பாண்டியன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். வீட்டில் உள்ளவர்கள் மாத்தி மாத்தி அதை பற்றி ராஜியிடம் கேள்வி கேட்டார்கள். உடனே மீனா எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாம். கதிர் போலீஸிடம் பேசிவிட்டு வரட்டும் என்றார். அப்போது போலீஸ், நகையை வாங்க முடியாது. முடிந்தவரை பணம் வாங்கி தருகிறோம் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் நடந்ததை விசாரிக்க, மீனா ஏதேதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தார. ஆனால், கதிர் நகை எடுக்கவில்லை என்றவுடன்பாண்டியன், கதிரை திட்டியது நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் கோபத்தில் பாண்டியன், ராஜியின் அப்பாவிடம் இதைப் பற்றி சொல்ல வெளியே கூப்பிட்டார். அப்போது பாண்டியன், கதிருக்காக சப்போர்ட் செய்து நகை உண்மையை சொல்லி ஆவேசமாக ராஜியின் அப்பாவை திட்டி இருந்தார். அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

நேற்று எபிசோட்டில் தன் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் சந்தோஷத்தில் பாண்டியன் மொட்டை மாடியில் சரக்கு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த ராஜி, யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்கள் கதிர் மீது சந்தேகப்பட்டு இருக்க கூடாது. அவன் ரொம்ப நல்லவன். அவனை மட்டும் ஏன் நீங்கள் பாசமாக நடத்த மாட்டுகிறீர்கள். ஆனால், அவன் உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறான் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி இருந்தார். இதை எல்லாம் கேட்டு பாண்டியன் வருத்தப்பட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் கீழே வந்த பாண்டியன், உனக்கு என்ன வேண்டும் என்று கேளு. நான் செய்கிறேன் என்றார். உடனே கதிர், ராஜி போலீசாக வேண்டும். அதற்கு சம்மதம் கொடுங்கள் என்று சொன்னவுடன் வழக்கம்போல் பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சுகன்யா- பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்று வழக்கம்போல அவரை திட்டிக் கொண்டிருந்தார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சுகன்யா அடுத்து என்ன பிரச்சனை செய்வாள் என்ற பயத்திலேயே பழனி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். அவரை பார்ப்பதற்காக கோமதி சென்றிருக்கிறார். அப்போது அவர், மீனாவின் அப்பாவிடமும் உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார். அக்கறையுடன் கோமதி பேசுவதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவருமே அவர்கள் மீது இருந்த கோபத்தை விட்டார்கள். அவர்களுமே கோமதியிடம் நன்றாக பேசினார்கள். அதுமட்டுமில்லாமல் மீனா அப்பா, செந்திலிடம் அக்கறையாக பேசுகிறார். இதை பார்த்து மீனாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. ஒரு வழியாக மீனாவின் அப்பா, செந்தில்-மீனா இருவரையும் ஏற்றுக்கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்கள் வெளியே செல்வதற்கு அழைக்கிறார்கள். ஆனால், ராஜி பணம் இல்லை என்பதால் முடியாது என்கிறார். உடனே கதிர் தன்னுடைய அம்மாவிடம் பணத்தை வாங்கி ராஜிக்காக கொடுக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கே செல்வது? என்று புரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருக்கிறது. அதை பார்த்தவுடன் தங்கமயில் உள்ளே சென்று வேலை கேட்கிறார். சப்ளையர் வேலை தான் இருக்கிறது என்ற உடன் தங்கமயிலும் ஒத்துக் கொள்கிறார். இதைப் பற்றி தன்னுடைய அம்மாவிடம் தங்கமயில் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement