விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், அரசி கல்யாணம் என்னுடைய பொறுப்பு. யாரும் அதைப்பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம். எவ்வளவு லட்சம் ஆனாலும் பரவாயில்லை. நான் அரசி கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீங்கள் எல்லோருமே அவர்கள் வேலையை பாருங்கள் என்று சொன்னார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாகி விட்டார்கள். அதற்குப்பின் ரூமில் மீனா, செந்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், அரசிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய என் அப்பா தயாராக இருந்தார். ஆனால், எனக்காக ஒரு ரூபாய் கூட தரம் தர மறுத்தார்.
இதை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று வேதனைப்பட்டு பேசி இருந்தார். அடுத்த நாள் காலையில் தான் கனவில் சாமி வந்ததாக சொல்லி கோமதி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியனிடம் சொன்னார். பாண்டியனும் சம்மதிப்பதால் எல்லோருமே கோயிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் மீனா, சக்திவேல் கட்டிடத்திற்கு நோட்டீஸ் ஓட்ட வந்திருந்தார். உடனே சக்திவேலும் குமாருமே மீனாவிடம் சண்டைக்கு போனார்கள். குடும்ப பகையை வைத்து தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று மீனாவை மோசமாக பேசி இருந்தார்கள். கோபத்தில் மீனா, சட்டப்படி தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். உடனே அங்கிருந்த பிரஸ்ஸை சக்திவேல் வரவைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சக்திவேல், உன்னை வேலை விட்டே தூக்குகிறேன். என்னுடைய பண பலத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று யார் யாருக்கோ போன் செய்தார். ஆனால், யாருமே ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. கவர்மெண்ட் சொல்வதை கேளுங்கள் என்று சில பேர் அறிவுரையும் சொன்னார்கள். பின் அங்கு வந்த போலீஸ், மீனாவிடம் பேசி பார்க்கிறார்கள். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் சக்திவேலிடம் அவர்கள், மீனா மேம் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சக்திவேல், எதுவும் பேச முடியாமல் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார். கடைசியில் கடையை இடித்து தரை மட்டும் ஆக்கி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் சரவணன், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சாப்பிட போனார். சரவணன் இருப்பது தெரியாமல் தங்கமயில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறி இருந்தார். பின் சரவணன், தங்கமயிலை பார்த்தவுடன் ஷாக் ஆனார். தங்கமயில் அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் பயப்பட்டார். அதற்கு பின் சரவணன், இது தான் நீ வேலைக்கு செல்லும் இடமா? என்று கேட்டார். உடனே தங்கமயில், என்னுடைய தோழி சொன்ன இடத்தில் ஆட்கள் எடுக்கவில்லை. அதனால் தான் இங்கு வேலைக்கு வந்தேன் என்று ஏதேதோ பொய் சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே சரவணன் ஏற்றுக் கொள்ளவில்லை, பயங்கரமாக கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், நீ இப்படி பொய் சொல்லிவிட்டு வேலைக்கு போவது சரியில்லை. எங்களை எல்லாம் ஏமாற்றுவாய் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று பயங்கரமாக கோபப்படுகிறார். தங்கமயில் என்ன சொல்வதென்றே புரியாமல் அழுது கொண்டே இருக்கிறார். பின் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் கெஞ்சியுமே சரவணன் கேட்கவில்லை அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இன்னொரு பக்கம் வீட்டிற்கு மீனா வருகிறார். அப்போது பாண்டியன்- கோமதி இருவருமே சக்திவேல் கடை விஷயமாக பேசுகிறார்கள். அப்போது மீனா, சட்டப்படி என்ன செய்யணுமோ அதை தான் செய்தேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மாப்பிள்ளை போன் செய்து அரசி இடம் பேசுகிறார். ஆனால், அரசி சரியாக பேசாமல் போனை வைத்து விடுகிறார். பின் மீனாவிடம் அரசியை பேச சொல்லி மாப்பிள்ளை கேட்கிறார். மீனாவும் அரசிக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த தங்கமயில், உண்மை தெரிந்து விட்டதோ? என்று ரொம்பவே பார்த்து இருக்கிறார். ஆனால், சரவணன் வீட்டில் எதையுமே சொல்லவில்லை. கோமதி, ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று திட்டுகிறார். சரவணன் எதுவும் சொல்லாமல் தங்கமயிலை முறைத்துக் கொண்டே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.