முறையே இல்லாமல் முறைகேடாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

0
838
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புது வீட்டின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து புதிய இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள் மூர்த்தி.

இந்த உண்மையை வீட்டில் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் வீட்டில் அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் சண்டை போட்டு மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே கோபம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று வீட்டை விட்டு துரத்தி விட்ட ஜனார்த்தனன் இப்போது கடையையும் இழுத்து மூடிவிட்டார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா திருமணம் :

மேலும் தனது இரண்டாவது மகளின் நிட்சயதார்த்தத்தில் குடும்பத்தை அழைத்து அசிங்கப்படுத்துகிறார் ஜனார்த்தனன். வீட்டில் இந்த பிரச்சனை போய் கொண்டிருக்க. தற்போது இந்த சீரியலில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பிரசாந்த் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் சில பிரச்சினைகளினால் ஐஸ்வர்யா கண்ணனை திருமணம் செய்து கொள்கிறார்.

காலச்சாரத்தை மாற்றிய சீரியல் :

இந்த நிலையில் பிரசாந்தை முல்லைக்கு மகன் போன்ற முறையில் இருப்பவர். அப்படியிருக்க மீனாவும் அதே முறைதான் வருவார். இந்த நிலையில் தன்னுடைய தங்கயையே திருமணம் செய்ய உள்ளார் பிரசந்த் என்று தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தகவல் வைரலாகவே எப்படி முறையே இல்லாமல் திருமணம் செய்கிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement