என் பொண்ண அந்த தே*** பையன் அடிச்சி சாவடிச்சிட்டான் – கதறி அழுத சித்ராவின் தாயாரை பேச விடாமல் தடுக்கும் சித்ராவின் தந்தை.

0
3021
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று (டிசம்பர் 8) அதிகாலை 3.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக திக்கிடும் தகவல் வெளியானது. நடிகை சித்ராவுடன் தங்கி இருந்த வருங்கால கணவர் ஹேமந்த் தான் சித்ரா இறந்த போது உடன் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

சித்ராவின் இறப்பு குறித்து பேசிய அவரது தந்தை தனது மகள் மரணத்தில் தனது மருமகன் மீது சந்தேகம் இல்லை என்றும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணத்தை காவல் துறை தான் கடுபிடிக்க வேண்டும் என்று பொறுப்பில்லாமல் கூறி இருந்தார். ஆனால், தனது மகளின் மரணம் குறித்து சித்ராவின் அம்மா பேசுகையில், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார. இப்படி ஒரு நிலையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. சித்ராவின் வீட்டின் முன் உறவினர்கள் பலரும் காத்துகொண்டு இருக்க, தனது மகன் மறைவு குறித்து கதறி அழுத சித்ராவின் தாயார், என் மகள் தற்கொலை செய்யவில்லை அந்த தே**** தான் என் மகளை கொன்றுவிட்டான் என்று கதறி அழுதார். ஆனால், அவரை பேசவிடாமல் தடுத்த சித்ராவின் தந்தை சித்ராவிற்கு கொண்டுவரப்பட்ட சவப் பெட்டி மீது படுத்தார். இதையெல்லாம் பார்க்கும் போது ரசிங்கர்களுக்கு ஒரே மர்மமாக தான் இருக்கிறது.

Advertisement