இவ்ளோ Controversy இருக்கும்னு எனக்கு தெரியாது – புதிய முல்லையின் பேச்சால் கடுப்பான சித்ராவின் ரசிகர்கள்.

0
30774
kavya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சீரியலில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காவ்யா, சித்ரா குறித்து பேசியது சித்ராவின் ரசிகர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பேட்டியில் பேசிய அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை நான் நடிப்பதற்கு முன்னாள் அவ்வளவாக பார்த்தது இல்லை. மேலும், நான் சீரியலுக்கு வருவதற்கு முன்னால் அந்த கதாபாத்திரம் இவ்ளோ வெயிட், இவ்ளோ கான்ட்ரவர்சி எல்லாம் இருக்கும்னு எனக்கு தெரியாது. எனவே, முல்லை கதாபாத்திரம் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. எனவே, நான் என்னை மாதிரி தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவங்கள(சித்ரா) மாதிரி எல்லாம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று பேசி இருந்தார் காவ்யா. இந்த பேட்டியை கண்ட சித்ராவின் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement