இதுக்கு முன்னாடி 8 பேர் அப்படி பின்னிட்டு போய் இருக்காங்க, உங்களால முடியாதனு கேட்டார் – லாரன்ஸ் பட ஆடிஷனில் Adjustment தொல்லை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

0
1485
- Advertisement -

முத்தம் கொடுத்தால் தான் வாய்ப்பு என்று கேட்ட நபரை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு ஸ்டோர்ஸ் மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை பிறகு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

பின் தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் இவர் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கிறார். அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது. இதனால் தனம்-மீனா இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். பின் ஒரு நாள் கண்ணன் லஞ்சம் வாங்கியது வீட்டிற்கு தெரிய வந்தவுடன் ஐஸ்வர்யாவிற்கு இடுப்பு வலி வந்து விட்டது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா கதாபாத்திரம் :

இப்படி ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கண்ணனை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். இப்படி கடந்த சில வாரங்களாவே ஐஸ்வர்யா – கண்ணன் கதாபாத்திரம் வைத்து தான் இந்த சீரியலை நகர்த்தி வருகின்றனர். ஐஸ்வர்யா ரோலில் விஜே தீபிகா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இந்த தொடரில் நடித்திருந்தார். ஆனால், பாதியில் வெளியேற்றப்பட்டார். பிறகு காயத்ரி நடித்தார். தற்போது மீண்டும் அந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தீபிகா பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அட்ஜெட்ஸ்மென்ட் குறித்து சொன்னது:

அதில், நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல casting couch பிரச்சனைகளை சந்தித்து இருக்கேன். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. அதற்கு ஆடிசனுக்கு அழைத்திருந்தார்கள். நானும் அங்கு போயிருந்தேன். அங்கு ஒரு ரூமில் ஒரு நபர் தவிர வேறு யாருமே இல்லை. படத்தில் அந்த கதாபாத்திரம் முத்தம் கொடுக்க வேண்டும். அதை செய்து காட்ட வேண்டும் என்று கேட்டார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். வேறு கதாபாத்திரம் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டபோது இதற்கு முன் எட்டு பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாது என்று வெளிப்படையாக கூறினார்கள்.

Advertisement