பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் விஜய்யின் தந்தையின் படத்தில் கிடைத்த வாய்ப்பு – யாருக்கு தெரியுமா ? புகைப்படம் இதோ.

0
2389
jeeva
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு விஜய்யின் தந்தை மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இந்நிலையில் இவருக்கு விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வெங்கட், பழம்பெரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை போனில் அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னை அழைக்க காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேம் தான்.

https://www.instagram.com/p/CFcJu9dBh-X/

அப்போதுதான் ஷோபா மேம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர் என்பது எனக்குத் தெரிந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்தார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.இவை அனைத்தும் கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது.

-விளம்பரம்-

ஆனால் இந்த கொரோனா வந்து மாற்றி விட்டது. கொரோனா எல்லோருடைய வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது என்னையும் சேர்த்து. எது எப்படியோ ஆனால் நான் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மகிழ்வான விஷயம்.மீண்டும் இது போல் சந்தர்ப்பங்கள் நல் விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன். இதேபோல் ஒருநாள் தளபதி விஜய்யையும் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement