தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.
இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு விஜய்யின் தந்தை மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் இவர் பல சீரியல்களில் நடித்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது ரசிகர் ஒருவர், படத்துல நடிக்கலாமே வாய்ப்பு வரலையா இல்லன்னா அவாய்ட் பண்றீங்களா உங்களை நான் அப்படி பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த வெங்கட் கண்டிப்பா நடிக்கலாமே ஆனால் இதையெல்லாம் தீர்மானிப்பது நேரம்தான் இருப்பினும் நான் வெற்றி பெற கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி என்று பதிலளித்துள்ளார். அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் எஸ் ஏ சந்திரசேகர் படத்தில் நடிக்கப் போவதாக கூறி இருந்தார். அப்போது சில புகைப்படங்களை கூட பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கொரோனாவிற்கு பின் எந்த அப்டேட்டும் வரல, எது என்னவோ நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார்.