இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா – பாண்டியன் ஸ்டோர்ஸ் கம்பம் மீனா கண்ணீர்.

0
3390
- Advertisement -

துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையில் கம்பம் மீனா பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்களில் சிலபேர் தான் தங்களுடைய வட்டார மொழியில் பேசுகிறார்கள். அந்த வகையில் கிராமப் பின்னணி கொண்ட கலைஞர்கள் சிலபேர் சீரியலில் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் வட்டார மொழி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கம்பம் மீனா.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி அத்தாச்சியாகவும், பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்காவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. உண்மையிலேயே இவர் மிகவும் துணிச்சலான பெண். இவருடைய ரியல் லைப் ஸ்டோரி கேட்டால் பல பெண்களுக்கும் மோட்டிவேஷன் ஆக இருக்கும். அந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் போராடி இருக்கிறார். சின்ன கிராமத்திலிருந்து வந்த இவர் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

- Advertisement -

கம்பம் மீனா குறித்த தகவல்:

வட்டாரமொழி பேச்சு தான் இவருடைய வெற்றிக்கு காரணம் என்று கூட சொல்லலாம். கம்பம் மீனாவின் நிஜப்பெயர் நாச்சிமுத்து மீனா. இவர் முதன்முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார். இவருடைய சினிமா பயணத்தை தொடங்கி வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா தான். இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்து உள்ளார். ஆனால், அவரைப் பற்றி பலருக்கும் பெரியதாக தெரியாது.

சோசியல் மீடியாவில் கம்பம் மீனா;

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி அத்தாச்சி, பாக்கியலட்சுமி சசீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். இது தவிர இவர் பிற சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கம்பம் மீனா எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் வீடியோக்களை அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

மீனா போட்ட சோகமான போஸ்ட்:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் கம்பம் மீனா பதிவிட்டு இருக்கும் சோகமான பதிவு தான் சோசியல் மீடியாவின் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இவருடைய அக்கா மகன் இறந்து இருக்கிறார். தற்போது இவரின் அக்கா மகனுக்கு 34 வயது தான் ஆகிறது. அந்த பிரிவை தாங்க முடியாமல் தான் கம்பம் மீனா சோகமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னடா அவசரம்.

அக்கா மகன் இறப்பு:

நீதாண்டா காரியக்காரன். தீஷிதனுக்கு 5 வயசு ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வர பாரு சித்தின்னு சொல்லி நான்கு நாள் தாண்டா ஆகுது. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கிறேன் பாரு சித்தின்னு சொன்னியே. நாலே நாளிலேயே என்னையே வரவுச்சிட்டியே பாண்டி. ஐயோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி. நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி என்று மன வேதனையில்கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement