அட, கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படத்தில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் – இதோ அந்த காட்சி.

0
2285
kumaran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். நடிகர் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்பாக மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். அதேபோல இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் சினிமாவில் நடித்து இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

அதுவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம்தான் நடிகர் குமரனும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் குமரன் இந்த படத்தின் கதாநாயகனான விக்ரம் பிரபுவின் நண்பராக நடித்திருப்பார் மேலும் இதுகுறித்து இவர் அளித்த பேட்டியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் இந்த படத்திற்காக தான் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார் குமரன்.

-விளம்பரம்-
Advertisement