பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விளகுகிறாரா குமரன் – இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் சோகம்.

0
5378
kumaran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
kumaran

இந்த சீரியலில் முல்லை – கதிர் ஜோடிக்காக மட்டும் பார்க்கும் கூட்டமும் உண்டு. சித்ரா இறந்த பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலை விட்டு குமரன் விரைவில் விலகப்போவதாக தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே குமரன் சமீபத்தில் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி தான். அதில், நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன், நன்றாக நான் செய்தேன். நானே இந்த நிகழ்ச்சியின் சிறந்த பார்வையாளனாக இருந்து, நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தேன். மேலும் நீங்கள் பார்த்தது தான் நிகழ்ச்சி.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி மாலத்தீவில் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

அதற்கு மேல் எதுவும் இல்லை. குறைவாகவும் எதுவும் இல்லை. எதுவும் வெட்டப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. வெற்றி அல்லது வெற்றி இல்லை என்பதை தாண்டி நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் நீங்கள் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது, நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார். இதனால் குமாரன் இந்த சீரியலை விட்டு விலகப்போகிறாரா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே சித்ரா மற்றும் குமரன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement